عن سالم بن أبي الجَعْدِ قال: قال رجل: ليتني صَلَّيتُ فاسترحْتُ، فكأنّهم عابُوا ذلك عليه، فقال: سمعتُ رسولَ الله صلى الله عليه وسلم يقول:
«يا بلالُ، أقِمِ الصَّلاةَ، أرِحْنا بها».

[صحيح] - [رواه أبو داود]
المزيــد ...

ஸாலிம் இப்னு அபுல் ஜஃத் கூறுகிறார்கள்: ஒரு மனிதர் நான் தொழுது நிம்மதி பெற்றால் சிறப்பாயிருக்குமே! என்று கூற அங்கிருந்தவர்கள் இதனை குறையாகப் பார்த்தார்கள் இதற்கு அவர் தான் அல்லாஹ்வின் தூதர் கூறுவதை செவிமடுத்துள்ளேன்.
பிலாலே தொழுகை;காக இகாமத் கூறுவீராக! அதன் மூலம் எமக்கு ஆறுதல் அளிப்பீராக என்றார்கள்.

ஸஹீஹானது-சரியானது - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

நபித் தோழர்களில் ஒருவர் 'நான் தொழுது ஆறுதல் பெற்றால் சிறப்பாயிருக்கமே' என்று கூற அதற்கு அவரை சூழ உள்ளோர் குறைபட்டுக்கொண்டார்கள் அதற்கு அவர் தான் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை செவிமடுத்தேன் அவர்கள்: நாம் ஆறுதல் பெறுவதற்காக பிலாலே தொழுகை;கான அதானைக் கூறி இகாமத்தும் கூறுவீராக! ஏனெனில் அல்லாஹ்வுடன் உரையாடுவது, ஆன்மாவுமக்கு உள்ளத்திற்குமான நிம்மதி அதிலுள்ளது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா மலயாளம் ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. தொழுகையில் அல்லாஹ்வுடன் இரகசியமாக உரையாடுதல் காணப்படுவதால் தொழுகையின் மூலம் உள்ளத்திற்கான நிம்மதி கிடைக்கும்.
  2. வணக்கவழிபாடுகளில் ஆர்வமின்மை,அலட்சியம் செய்வோரை கண்டித்தல்.
  3. யார் தனக்குரிய கடமையை நிறைவேற்றுகிறாறோ, அவர் தமக்கு விதிக்கப்பட்ட பொறுப்பிலிருந்து தப்பிவிட்டார். அதன் மூலம் அவருக்கு ஆறுதல் மற்றும் நிம்மதியுணர்வும் கிடைக்கிறது.
மேலதிக விபரங்களுக்கு