عن أبي عبد الله جابر بن عبد الله الأنصاري رضي الله عنهما أن رجلاً سأل رسول الله صلى الله عليه وسلم فقال: أرأيت إذا صليت المكتوبات، وصمت رمضان، وأحللت الحلال، وحرمت الحرام، ولم أزد على ذلك شيئاً، أأدخل الجنة؟ قال: «نعم».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
அபூ அப்தில்லாஹ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறினார்கள் : "ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். “நான் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றுகின்றேன், ரமழானில் நோன்பு நோற்கின்றேன், ஹலாலை ஹலாலாக்கி, ஹராத்தை ஹராமாக்குகின்றேன். இதற்குமேல் நான் எதுவும் செய்யவில்லை. இந்த நிலையில் நான் சுவர்க்கத்தில் நுழைவேனா? என்று எனக்குக் கூறுங்கள்”. நபியவர்கள் “ஆம்!” என்று பதில் தந்தார்கள்".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அபூ அப்தில்லாஹ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறினார்கள் : "ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். “நான் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றுகின்றேன்". அதாவது ஸுன்னத்தான தொழுகைகளின்றி ஐவேளைத் தொழுகைகளை மாத்திரம் நிறைவேற்றுகின்றேன், ஸுன்னத்தான நோன்புகளின்றி ரமழானில் மாத்திரம் நோற்கின்றேன். “ஹலாலை ஹலாலாக்குதல்” என்றால் அது ஹலால் என நம்பிக்கை கொள்வதுடன், அதனை பயன்படுத்துதலாகும். “ஹராத்தை ஹராமாக்குதல்” என்றால் அது ஹராம் என நம்பிக்கை கொள்வதுடன் தவிர்ந்து கொள்ளல், அனுமதிக்கப்பட்டவற்றுடன் போதுமாக்கிக் கொள்ளல். இதற்குமேல் நான் எதுவும் செய்யவில்லை. இந்த நிலையில் நான் சுவர்க்கத்தில் நுழைவேனா?, நபியவர்கள் “ஆம்!” என்று பதில் தந்தார்கள். ஏனெனில் இறையச்சம் என்பது கடமையைச் செய்வதுடன், தடுக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து கொள்ளலாகும். இது போன்றவர்கள்தான் இறைவசனத்தில் நடுநிலையாக நடந்து கொண்டவர்கள் என அறியப்பட்டோராகும். இவர்கள்தான் அல்லாஹ் கடமையாக்கியதைத் தவிர வேறெதனையும் அதிகரிக்காதவர்கள், அவன் ஹராமாக்கியதைத் தவிர வேறெதனையும் தவிர்ந்து கொள்ளாதவர்களாகும்.