عَن عَبْدِ اللَّهِ بنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ:
«مَنِ اسْتَطَاعَ البَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ، فَإِنَّهُ لَهُ وِجَاءٌ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1905]
المزيــد ...
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்;.நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் இருந்தோம் அப்போது நபியவர்கள் கூறினார்கள் :
''யார் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும்; ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 1905]
திருமணத்திற்குப் பிறகு, ஒருவரின் பார்வையும் அந்தரங்க உறுப்புகளும் தடைசெய்யப்பட்ட விஷயங்களிலிருந்து பாதுகாக்கப்படும், மேலும் ஒழுக்கக்கேடான செயல்களில் விழும் வாய்ப்புகள் குறையும் என்பதால், நபி (ஸல்) அவர்கள், உடலுறவில் ஈடுபடுவதற்குரிய சக்தியும், திருமணத்திற்குரிய வசதிகளை பெற்ற அனைவரையும் திருமணம் செய்து கொள்ளுமாறு ஊக்குவித்தார்கள். உடலுறவு கொள்ளும் சக்தி இருந்தும்;,திருமணச் செலவுகளுக்கான வசதி ஒருவருக்கு இல்லை என்றால், அவர் நோன்பு நோற்க வேண்டும், ஏனெனில் நோன்பானது காமத்தைக் குறைக்க உதவுகிறது.