عن ثَوْبَان رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا انْصَرف من صلاته اسْتَغْفَر ثلاثا، وقال: «اللهُمَّ أنت السَّلام ومِنك السَّلام، تَبَارَكْتَ يا ذا الجَلال والإكْرَام».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

ஸவ்பான் (ரலி) கூறுகின்றார் : நபி (ஸல்) அவர்கள் தொழுகை முடிந்ததும் "அஸ்தஃபிருல்லாஹ்" என்று மூன்று தடைவ சொல்லி விட்டு பின்வரும் துஆவை ஓதுவார் : "அல்லாஹும்ம அந்தஸ் ஸலாமு வமின்கஸ் ஸலாமு தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராமி".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

தொழுகை முடிந்ததும் "அஸ்தஃபிருல்லாஹ், அஸ்தஃபிருல்லாஹ், அஸ்தஃபிருல்லாஹ்" என்று மூன்று தடைவ சொல்லி விட்டு பின்வரும் துஆவை ஓதுவது ஸுன்னத்தாகும் என்பதை இந்நபிமொழி அறிவிக்கின்றது : "அல்லாஹும்ம அந்தஸ் ஸலாமு வமின்கஸ் ஸலாமு தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராமி". தொழுகைக்குப் பின் ஓதவேண்டிய இன்னும் பல துஆக்கள் நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. தொழுகை முடிந்தவுடன் தக்பீர் செல்ல வேண்டும் என்ற கூற்றுக்கு இதில் பதிலுண்டு.
  2. ஸலாம் என்பது அல்லாஹ்வின் திருநாமமாகும், அனைத்துக் குறைகளை விட்டும் ஈடேற்றமானவன் எனும் பண்பும் அவனுக்குரியதாகும். ஈருலக கெடுதிகளிலிருந்து தனது அடியார்களுக்கு ஈடேற்றத்தை வழங்குபவன் அவனே.
மேலதிக விபரங்களுக்கு