عن عائشة رضي الله عنها ، وعبد الله بن عمر رضي الله عنهما قالا: قال رسول الله صلى الله عليه وسلم : «ما زال جبريل يوصيني بالجار، حتى ظننت أنه سيورِّثه».
[صحيح] - [متفق عليه من حديث ابن عمر -رضي الله عنهما-، ورواه مسلم من حديث عائشة -رضي الله عنها]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) , மற்றும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆகியோர் கூறுகின்றார்கள்: "அயலவரை எனக்கு வாரிசுக்காரராக ஆக்கி விடுவாரோ என நான் எண்ணுமளவிற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் இவர்களைப் பற்றி எனக்கு உபதேசித்துக் கொண்டே இருந்தார்கள்".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

அயலவருக்கு சொத்தில் பங்கு கொடுக்கும் படி ஜிப்ரீல் (அலை) அவர்கள் எனக்கு வஹீ கொண்டு வருவார்கள் என நான் நினைக்குமளவு அயலவர்கள் விடயத்தில் கரிசனை எடுக்குமாறு அவர்கள் எனக்கு உபதேசித்துக் கொண்டே இருப்பார்கள் என நபியவர்கள் கூறுகின்றார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அயலவர்களின் உரிமையின் மகத்துவம் மற்றும் அதை கணக்கில் எடுத்துக்கொள்வதன் அவசியம் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
  2. உபதேசம் செய்து அவர்களின் உரிமையை வலியுறுத்துவதானது அவர்களை மதித்து, நேசித்து, உபகாரம் புரிதல், ஆபத்துக்களைத் தடுத்தல், நோயுறும் போது நலம் விசாரத்தல், மகிழ்வுறும் விடயங்களின் போது வாழ்த்துதல், துன்பங்களின் போது ஆறுதல் கூறுதல் போன்றவற்றின் அவசியத்தை உணர்த்துகின்றது.
மேலதிக விபரங்களுக்கு