عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: لَأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ يُحَدِّثُكُمْ بِهِ أَحَدٌ غَيْرِي: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ العِلْمُ، وَيَكْثُرَ الجَهْلُ، وَيَكْثُرَ الزِّنَا، وَيَكْثُرَ شُرْبُ الخَمْرِ، وَيَقِلَّ الرِّجَالُ، وَيَكْثُرَ النِّسَاءُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً القَيِّمُ الوَاحِدُ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்களிடமிருந்து கேட்ட ஒரு ஹதீஸை உங்களுக்கு அறிவிக்கிறேன், என்னைத் தவிர யாரும் அதை உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள் கூற நான் செவியுற்றேன் .
'அறிவு உயர்த்தப்படுதல், அறியாமை மேலோங்குதல், விபச்சாரம் பெருகுதல்;;, மது அருந்துவது சர்வசாதாரணமாகிவிடுதல்;, ஆண்களின் எண்ணிக்கை குறைதல்;. ஐம்பது பெண்களுக்கு ஒரு ஆண் மட்டுமே அவர்களைக் கவனிக்கும் -நிர்வகிக்கும்-அளவுக்கு பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்றன மறுமை நாளின் அடையாளங்களுள் சிலதாகும்;.'
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கியாம நாள் நெருங்கும் போது நிகழும் சில அடையாளங்கள் குறித்து தெளிவு படுத்துகிறார்கள். அவற்றுள் முதன்மையான விடயமாக அறிஞர்களின் மரணம் காரணமாக ஷரீஆ பற்றிய அறிவு உயர்தப்படுதலைக் குறிப்பிடுகிறார்கள். இதன் விளைவாக அறியாமை மேலோங்கி எல்லா இடத்திலும் அறியாமை பரவிவிடும்.விபச்சாரமும் மானக்கேடான விடயங்களும்; சர்வசாதாரணமாக பரவும். மது அதுருந்துதல் அதிகரித்துவிடும். ஒரு ஆண் ஜம்பது பெண்களின் விவகாரங்களை நிர்வகி;த்து அவர்களின் நலன்களை பொருப்பேற்று நடாத்தும் அளவுக்கு, பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து ஆண்களின் எண்ணிக்கை குறைந்து விடும்.