+ -

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ بِقَبْرِ الرَّجُلِ فَيَقُولُ: يَا لَيْتَنِي مَكَانَهُ».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 7115]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, 'அந்தோ! நான் இவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது.

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 7115]

விளக்கம்

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் மண்ணறையை கடந்து செல்கையில் தான் அவன் இருக்கும் இடத்தில் இருந்திருக்க வேண்டுமே என்று நினைக்கும் வரையில் மறுமை ஏற்பட மாட்டாது. அசத்தியமும் அசத்திய வாதிகளும் மிகைத்ததின் விளைவாக மரர்க்கம் தன்னை விட்டு சென்றுவிடும் என்ற பயமும், குழப்பங்கள் பாவகாரியங்கள் மானக்கேடான விடயங்கள் அதிகரித்து மிகைத்திருப்பதுமே இவ்வாறு நினைப்பதற்கு காரணம் என குறிப்பிடுகிறார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இறுதிக்காலத்தில் பாவங்களும் குழப்பங்களும் பகிரங்கமாக காணப்படும் என்பதை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டியிருத்தல்.
  2. இவ்வாறான விடயங்களில் எச்சரிக்கையாக இருக்கும் படி வலியுறுத்தியிருத்தல். அத்துடன் ஈமான், நல்ல காரியங்களின் மூலம் மரணத்திற்குத் தயாராகுதல், குழப்பங்கள் சோதனைகள் உள்ள இடத்தை விட்டும் விலகியிருத்தல்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது இந்தோனேஷியன் உய்குர் மொழி துருக்கிய மொழி போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوكرانية الجورجية المقدونية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு