«مَن تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ».
[حسن] - [رواه أبو داود وأحمد] - [سنن أبي داود: 4031]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா கூறினார்கள் :
யார் எந்த சமூகத்திற்கு ஒப்பாக நடப்பாரோ அவர் அச்சமூகத்தைச் சேர்ந்தவராவர்
[ஹஸனானது-சிறந்தது] - - [سنن أبي داود - 4031]
யார் ஒருவர் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கே உரிய தனித்துவமான நம்பிக்கைள் அல்லது வணக்க வழிபாடுகள் அல்லது வழக்காறுகள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பின்பற்றிச் செய்வதன் மூலம் அவர்களில் உள்ள இறைநிராகரிப்பாளர்கள் அல்லது மோசமான தீய விடயங்களில் ஈடுபடுவோர் அல்லது அந்த சமூகத்தில் உள்ள நல்லோர்களுக்கு-ஆன்மீகவாதிகளுக்கு- ஒப்பாக நடந்து கொள்கின்றாறோ அவரும் அவர்களைச் சார்ந்தோரே என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். ஏனெனில் புறத்தோற்றத்தில் காபிர்களுக்கு ஒப்பாக நடத்தல் உள்ரங்கத்தில் ஒப்பாக நடக்க வழிவகுத்துவிடும். ஒரு சமூகத்துக்கு ஒப்பாக நடத்தல் என்பது அந்த சமூகத்தின் மீதுள்ள கவர்ச்சியின் விளைவாக ஏற்படுவதாகும். இது அவர்களை நேசம் கொள்வதற்கும், அவர்களை கண்ணியப்படுத்து வதற்கும், அவர்களை சார்ந்து வாழ்வதற்கும் சில வேளை வழிவகுத்துவிடுவதோடு, உள்ரங்கத்திலும் வணக்கத்திலும் அவர்களுக்கு ஒப்பாக நடப்பதற்கு இட்டுச்சென்று விடுகிறது. அல்லாஹ் எம்மனைவரையும் பாதுகாப்பானாக!
التشبه في الظاهر يورث المحبة في الباطن.التشبه فى الظاهر مش مستلزم المحبة للباطن, المسلمين سنوات يركبون سيارات, يلبسون البنطلون, هل أصبح المسلمين مثل غير المسلمين فى الاعتقاد ؟ هل أصبح المسلمين مسيحيين