عن عائِشَة رضي الله عنها مرفوعاً: «لا صلاة بِحَضرَة طَعَام، وَلا وهو يُدَافِعُه الأَخبَثَان».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக்கூடாது".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
தொழுகையின் போது அடியாரின் உள்ளம் இறைவன் முன்னிலையில் ஆஜராகுவதை அவன் விரும்புதாக இந்நபிமொழி உறுதிப்படுத்துகின்றது. அமைதி, உள்ளச்சத்தை இல்லாமல் செய்யும் வெளிப் பராக்குகளைத் துண்டிப்பதன் மூலம் மாத்திரமே இது சாத்தியப்படும். இதனால் உடனே உண்ண விரும்பும் உணவு அங்கு காத்திருக்கத் தொழுவதை அல்லாஹ் தடுத்துள்ளான், அதேபோன்று சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழுவதனால் அதிலேயே கவனம் சிதறுவதனால் அதனையும் தடுத்துள்ளான்.