பிரிவுகள்: . .
+ -
عن عُبَادَةَ بن الصَّامتِ رضي الله عنه قال:

بَايَعْنَا رسولَ اللهِ صلى الله عليه وسلم على السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْعُسْرِ وَالْيُسْرِ، وَالْمَنْشَطِ وَالْمَكْرَهِ، وعلى أَثَرَةٍ علينا، وعلى أَلَّا نُنَازِعَ الْأَمْرَ أهلَه، وعلى أَنْ نَقُولَ بِالْحَقِّ أينما كُنَّا، لا نَخَافُ في الله لَوْمَةَ لَائِمٍ.
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 1709]
المزيــد ...

உபாதா இப்னு அஸ்ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் :
இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப் படிந்து நடப்போம் என்றும், எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளர்களிடம் நீங்கள் கண்டாலே தவிர அவர்களுடைய அதிகாரம் தொடர்பாகச் சண்டையிட மாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையே பேசுவோம் என்றும், அல்லாஹ்வின் விடயத்தில் பழிப்போரின் பழிச்சொல்லுக்கு அஞ்சமாட்டோம் என்றும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நாங்கள் உறுதிமொழி அளித்தோம்.

الملاحظة
عن عبادة بن الصامت رضي الله عنه قال: بَايَعْنَا رسول الله صلى الله عليه وسلم على السَّمع والطَّاعَة في العُسْر واليُسْر، والمَنْشَطِ والمَكْرَه، وعلَى أَثَرَةٍ عَلَينا، وعلى أَن لاَ نُنَازِعَ الأَمْر أَهْلَه إِلاَّ أَن تَرَوْا كُفْراً بَوَاحاً عِندَكُم مِن الله تَعَالى فِيه بُرهَان، وعلى أن نقول بالحقِّ أينَما كُنَّا، لا نخافُ فِي الله لَوْمَةَ لاَئِمٍ.
النص المقترح لا يوجد...

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 1709]

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது தோழர்களிடத்தில், அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு இன்பத்திலும் துன்பத்திலும் -இலகுவான விடயத்திலும் சிரமமான விடயத்திலும், - வசதியான மற்றும் வறுமையான நிலைகளிலும், கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி பெற்றார்கள். அத்துடன் அவர்களின் ஆணைகள்; தமக்கு விருப்பமானதாக அல்லது விருப்பமில்லததாக இருப்பினும் சரியே, அதே போன்று குடிமக்களுக்கு சேரவேண்டிய பொது நிதிகள், பதவிகள் மற்றும் இவைகள் அல்லாத விடயங்களில் தமக்கு முன்னுரிமையளித்து அவற்றை அவர்கள் அனுபவித்தாலும் அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி, போராட்டாம் செய்யாது நியாயமான முறையில் அவர்களின் ஆணைகளை செவியேற்று கட்டுப்பட்டு நடப்பது கடமையாகும். ஏனெனில் அவர்களின் இந்த அநியாயத்தை விடவும் இந்தப் போராட்டம், கிளர்ச்சி அதிக தீங்குகளையும், பாரிய குழப்பங்களையும், முஸ்லிம்களுக்கு மத்தியில் தோற்றுவிக்கின்றது. அதே போன்று அவர்கள் குறித்து அல்லாஹ்வுக்கு மாத்திரம் பயந்தவர்களாக இதயசுத்தியுடன், எவரது பழிச்சொல்லுக்கும் பயப்படாது உண்மையை கூறுவதிலும் தயங்கக்கூடாது.

الملاحظة
As salam 'Aleykoum. La règle de ce hadith ne vaut que dans les pays gouverné par des musulmans. Un renvoi vers une jurisprudence ou explication élargie serait peut-être utile. Allah seul le sait.
النص المقترح لا يوجد...

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கட்டுப்படுவதன் விளைவு முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினை கலைந்து ஒற்றுமை ஏற்படுவதற்கு காரணமாக அமையும்.
  2. அல்லாஹ்வுக்கு முரணில்லாத விடயங்களில் இன்பத்திலும் துன்பத்திலும், விருப்பிலும் வெறுப்பிலும், அவர்கள் தமக்கென முன்னுரிமை அளித்து அனுபவிப்பதிலும் அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் செவிசாய்த்து கட்டுப்பட்டு நடப்பது கடமையாகும்.
  3. நாம் எங்கிருந்த போதும் எவரின் பழிச்சொல்லுக்கும் பயப்படாது அல்லாஹ்விற்கு மாத்திரம் பயந்தவர்களாக சத்தியத்தை உரைப்பது கடமையாகும்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Итолёвӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوكرانية الجورجية المقدونية
மொழிபெயர்ப்பைக் காண
பிரிவுகள்
  • .
  • . .
மேலதிக விபரங்களுக்கு