عَنْ المُغِيرَةِ رضي الله عنه قَالَ:
كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَهْوَيْتُ لِأَنْزِعَ خُفَّيْهِ، فَقَالَ: «دَعْهُمَا، فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ» فَمَسَحَ عَلَيْهِمَا.
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
முகீரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'நான் ஒரு பயணத்தின்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (வுழுச் செய்தபோது) அவர்களின் இரண்டு காலுறைகளையும் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அதைவிட்டுவிடுவீராக. கால்கள் இரண்டும் வுழுவுடன் இருக்கும் நிலையில்லதான் காலுறைகளை அணிந்தேன்' என்று கூறிவிட்டு அவ்விரு காலுறைகளின் மீதும் மஸ்ஹ் செய்தார்கள்'
ஸஹீஹானது-சரியானது - புஹாரியும், முஸ்லிமும் ஒன்றுபட்டது.இதன் வாசகம் புஹாரீ அவர்களுக்குரியது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு பிரயாணத்தில் இருந்தார்கள் அப்போது அவர்கள் வுழு செய்தார்கள் இரு கால்களையும் கழுவும் நிலையை அடைந்ததும் முகீரா இப்னு ஷுஃபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களின் கால்களில் இருந்த பாதணிகளை கழுவி விடுவதற்காக கையை நீட்டினார்கள். அப்போது நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அதனை –காலுறைகளை-பாதணிகளை- -கழட்டாது விட்டுவிடுங்கள் ஏனெனில் நான் அதனை வுழுவோடு இருக்கும் நிலையிலேயே அணிந்தேன் என்று கூறினார்கள். இரு கால்களையும் கழுவுவதற்குப்பதிலாக தனது இரு காலுறைகளின்-(பாதணிகளின்) - மீதும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மஸ்ஹ் செய்தார்கள்.