عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ، فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ المُؤَذِّنُ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் முஅத்தின் கூறுவது போன்று கூறுங்கள்'
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
முஅத்தின் -தொழுகை அழைப்பாளர்- பாங்கு கூறினால் அவற்றிற்கு அவர் கூறுவதை போன்று வார்த்தைக்கு வார்த்தை பதில் கூறுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதாவது அவர்-முஅத்தின்- அல்லாஹு அக்பர் எனக்கூறினால் அவரைத்தொடர்ந்து நாம் அல்லாஹு அக்பர் கூற வேண்டும் அதே போன்று ஷாஹாதா - அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு, அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ் என்று கூறுகையில் தொடர்ந்து நாம் அது போல் கூற வேண்டும். ஆனால் (ஹய்யஅலஸ்ஸலாஹ்,ஹய்யஅலல் பலாஹ்) என்ற வார்;த்;தைகள் இவற்றிலிருந்து விதிவிலக்குப்பெறுகிறது. இந்த வார்த்தையினை முஅத்தின் கூறிய பின் லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ் எனக் கூறுதல் வேண்டும்.