عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ، فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ المُؤَذِّنُ».

[صحيح] - [متفق عليه]
المزيــد ...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் முஅத்தின் கூறுவது போன்று கூறுங்கள்'

ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

முஅத்தின் -தொழுகை அழைப்பாளர்- பாங்கு கூறினால் அவற்றிற்கு அவர் கூறுவதை போன்று வார்த்தைக்கு வார்த்தை பதில் கூறுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதாவது அவர்-முஅத்தின்- அல்லாஹு அக்பர் எனக்கூறினால் அவரைத்தொடர்ந்து நாம் அல்லாஹு அக்பர் கூற வேண்டும் அதே போன்று ஷாஹாதா - அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு, அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ் என்று கூறுகையில் தொடர்ந்து நாம் அது போல் கூற வேண்டும். ஆனால் (ஹய்யஅலஸ்ஸலாஹ்,ஹய்யஅலல் பலாஹ்) என்ற வார்;த்;தைகள் இவற்றிலிருந்து விதிவிலக்குப்பெறுகிறது. இந்த வார்த்தையினை முஅத்தின் கூறிய பின் லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ் எனக் கூறுதல் வேண்டும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو الأسامية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. பல முஅத்தின்களின் அதானைக் கேட்கும் சந்தர்ப்பங்களில் முதலாவது ஒருவரின் பாங்கை பின்தொடர்ந்து பதிலளித்ததன் பின் மற்றைய அதானை பின்தொடர வேண்டும் என்பது இந்த ஹதீஸ் குறிப்பிடும் பொதுக்கருத்தாகும்.
  2. தனது இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காக செல்லும் சந்தர்ப்பம் தவிர்ந்த மற்றைய அனைத்து நிலமைகளிலும் அதானுக்கு பதிலளிக்க வேண்டும்.