عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ: اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ القَائِمَةِ، آتِ مُحَمَّدًا الوَسِيلَةَ وَالفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ القِيَامَةِ».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 614]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்:
யாராவது அதானைக் கேட்ட போது, 'அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மா, வஸ்ஸலாதில் காஇமா, ஆதி முஹம்மதனில் வஸீலத வல் பழீலா, வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்' என்று கூறுகின்றாரோ, அவருக்கு மறுமையில் எனது சபாஆ (பரிந்துரை) கிடைக்கும்.
துஆவின் அர்த்தம் : யா அல்லாஹ் இந்த முழுமையான அழைப்பினதும் நிலையான தொழுகையினதும் ரப்பே! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வசீலா என்னும் அந்தஸ்தையும், சிறப்பையும் கொடுப்பாயாக! நீ வாக்களித்திருக்கின்ற புகழுக்குரிய அந்தஸ்துக்கு அவரை அனுப்புவாயாக.
[சரியானது] - [இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்] - [புஹாரி - 614]
இங்கு நபியவர்கள் தெளிவுபடுத்துவது என்னவென்றால் யாராவது ஒரு முஸ்லிம் பாங்கு சொல்வதைக் கேட்டு பின்னர்,
(யா அல்லாஹ்! இந்த முழுமையான) அதாவது இறைத்தூதினதும், ஓரிறைக் கொள்கையினிதும் பரிபூரணமான (அழைப்பின் ரப்பே) அதாவது அல்லாஹ்வை வணங்கவும், தொழுகையை நிலைநாட்டவும் விடுக்கப்படும் அழைப்பு (நிலையான தொழுகை) என்ற நிலை நாட்டப்படும் தொழுகை (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வசீலாவையும்) இது நபியவர்களுக்கு மாத்திரம் தகுதியான சுவனத்தின் ஓர் உயர்ந்த அந்தஸ்தாகும் (சிறப்பையும் கொடுப்பாயாக) அதாவது ஏனைய படைப்புக்களை விட உயர்ந்த அந்தஸ்தை அவர்களுக்கு கொடுப்பாயாக (அவர்களை புகழப்பட்ட அந்தஸ்துக்கு அனுப்புவாயாக) அதாவது புகழுக்குரிய அந்தஸ்தாகிய மறுமையில் உள்ள மகத்துவமிக்க சபாஆ
(அதாவது நீ அதனை அவர்களுக்கு வாக்களித்துள்ளாய்) அதாவது, 'உம்முடைய இறைவன், “மகாமம் மஹ்முதா” என்ற (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்' என்ற வசனத்தின் மூலம் அது நபியவர்களுக்கு உரியது என்று அல்லாஹ் வாக்களித்துள்ளான்.
இந்த துஆவை யார் ஓதுகின்றாரோ அவருக்கு மறுமையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரை கட்டாயமாகி விடும்.