عن جرير بن عبد الله البجلي رضي الله عنه قال: كنا عندَ النبيِّ صلى الله عليه وسلم فنظرَ إلى القمرِ ليلةَ البدرِ، فقالَ: «إنَّكم سترون ربَّكُمْ كما تروْن هذا القمر، لاَ تُضَامُونَ في رُؤْيَته، فَإن استطعتم أنْ لاَ تُغْلَبُوا على صلاة قبل طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا، فَافْعَلُوا». وفي رواية: «فنظر إلى القمر ليلة أربع عشرة».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறுகின்றார்கள் : "நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி "இந்த நிலவை நீங்கள் தடங்கலின்றிக்(தெளிவாக கஷ்டமின்றி) காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!'' என்று கூறினார்கள்". மற்றுமொரு அறிவிப்பில் "பதினான்காம் இரவில் நிலவைப் பார்த்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறுகின்றார்கள் : "அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது முழு நிலவுள்ள இரவில் அல்லது பதினான்காம் இரவில் முழு நிலவை நோக்கி "இந்த நிலவை நீங்கள் காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்!" என்றார்கள். அதாவது மறுமையில் சுவனத்தில் விசுவாசிகள் அல்லாஹ்வைக் காண்பார்கள். அல்லாஹ் நிலவைப் போன்றவன் என்பது இதன் அர்த்தமல்ல, ஏனெனில் அவனைப் போன்று ஏதுமில்லை, அவன் இவற்றையெல்லாம் விட மிக மகத்தான, கண்ணியமானவன். இங்கு பார்க்கப்படும் பொருளை ஒப்பிடுவதல்ல நோக்கம், தெளிவான பார்வையை ஒப்பிடுவதே நோக்கமாகும். நாம் பௌர்ணமி தினத்தில் வெற்றுக் கண்ணால் தெளிவாக நிலவைக் காண்பது போல் மறுமையில் அல்லாஹ்வை வெற்றுக் கண்ணால் தெளிவாகக் காணலாம். சுவனவாசிகளுக்கு மிக விருப்பமான, இன்பமான விடயம் அல்லாஹ்வைக் காண்பதாகும். அதற்கு நிகராக ஏதுமில்லை. அத்துடன் இதனைக் கூறிய நபியவர்கள் தொடர்ந்து "சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!" என்று கூறினார்கள். "தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால்" என்பதன் அர்த்தம் அவ்விரு தொழுகைகளையும் முழுமையாகத் தொழுவதாகும், பள்ளியில் கூட்டாக நிறைவேற்றுவதும் இதில் அடங்கும். பஜ்ர், அஸர் தொழுகைகளைப் பேணி வருவதும் அல்லாஹ்வைக் காண்பதற்கான காரணிகளில் உள்ளவை என்பதற்கு இந்நபிமொழி ஆதாரமாகவுள்ளது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. நபி (ஸல்) அவர்களுடன் ஒன்றாக உட்கார்வதில் நபித்தோழர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
  2. விசுவாசிகள் மறுமையில் அல்லாஹ்வைக் காண்பார்கள் என்ற நற்செய்தியை இந்நபிமொழி உறுதிப்படுத்துகின்றது.
  3. அல்லாஹ்வின் பண்புகளை மறுத்து, திரிபுபடுத்துவோர் கூறுவது போன்றல்லாமல் யதார்த்தமாகவே அல்லாஹ்வைக் காணலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
  4. பஜ்ர், அஸர் தொழுகைகளின் சிறப்பு கூறப்பட்டுள்ளது, எனவே அவ்விரண்டையும் பேணுவது அவசியமாகும்.
  5. வானவர்கள் சந்தித்துக் கொள்வதாலும், நற்செயல்கள் உயர்த்தப்படுவதாலுமே அதன் சிறப்புக்கள் தவறாமல் இருக்கும் பொருட்டு இவ்விரு நேரங்களும் குறித்துக் கூறப்பட்டுள்ளன.
  6. ஒன்றை வலியுறுத்திக் கூறுவதும், ஊக்குவிப்பதும் அழைப்புப் பணியின் வழிமுறைகளில் உள்ளவையாகும்.
மேலதிக விபரங்களுக்கு