عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لاَ يُصَلِّي أَحَدُكُمْ فِي الثَّوْبِ الوَاحِدِ لَيْسَ عَلَى عَاتِقَيْهِ شَيْءٌ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 359]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
உங்களில் யாரும் தனது இரு தோள்புயங்களிலும் எந்த ஒன்றும் இல்லாமல் ஒரு ஆடையில் தொழ வேண்டாம்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 359]
இங்கு நபியவர்கள் ஒரே ஒரு ஆடையில் தொழுபவர், தனது தோள் புயங்கள் மேல் எதையும் வைத்து மறைக்காமல் தொழுவதை தடுக்கின்றார்கள். ஏனெனில் இரு தோள் புயங்களும் அவ்றத்தாக இல்லாவிட்டாலும், அவ்விரண்டையும் மறைப்பதுவே அவ்ரத்தை மறைப்பதை முழுமைப்படுத்தும். தொழுகையில் அல்லாஹ்வுக்கு முன்னிலையில் நிற்கும் போது இவ்வாறு மறைத்திருப்பது அவனை கண்ணியப் படுத்தும், மகத்துவப்படுத்தும் ஒரு அடையாளம் ஆகும்.