عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم : "من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد " وفي رواية " مَن عَمِلَ عملًا ليس عليه أمرُنا فهو رَدٌّ".
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) கூறுகின்றார்கள் : "c2">“நம்முடைய இந்த விடயத்தில் (தீனில்) அதில் இல்லாததை நுழைப்பவர்களின் செயலானது நிராகரிக்கப் படக்கூடியதாகும்”. மற்றுமொரு அறிவிப்பில் (1718) பின்வருமாறு இடம் பெற்றுள்ளது : "c2">“நம்முடைய விடயத்தோடு (மார்க்கப் போதனைகளோடு) ஒத்துப் போகாத ஒரு செயலை எவராவது செய்யின் அது ஏற்றுக் கொள்ளப்படாது ஒதுக்கப்படும்”.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

மார்க்க ரீதியான ஆதாரமோ, பொதுவிதிகளோ அறிவிக்காததன் காரணமாக மார்க்கத்திற்கு உடன்படாத அனைத்து சொல், செயல்களும் ஏற்கப்படாது, தட்டப்பட்டு விடும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ஆட்சியாளர்களுடை தீர்ப்பு மார்க்கத்தில் உள்ளதை ஒரு போதும் மாற்றாது. ஏனெனில் நபியவர் “நம்முடைய இந்த விடயத்தில்" எனக் கூறயுள்ளார்கள், இங்கு விடயம் என்பது மார்க்கமாகும்.
  2. மார்க்கம் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
  3. நம்பிக்கை சார்ந்த, செயல் சார்ந்த எந்த பித்அத்தாக இருந்தாலும் அது செல்லுபடியற்றதாகும். அல்லாஹ்வின் பெயர், பண்புகளை மறுத்தல், முர்ஜிஆக்களின் பித்அத், விதியை மறுத்தல், பாவங்கள், செயல் ரீதியான பித்அத்களை வைத்து காபிராக்குதல் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.
  4. மார்க்கம் மனித கருத்தை வைத்தோ, மக்கள் நல்லதாகக் கருதுவதை வைத்தோ தீர்மானிக்கப்படமாட்டாது.
  5. இஸ்லாம் பரிபூரணமான மார்க்கமாகும்.
  6. மார்க்கத்திற்கு உடன்படாத அதில் உருவாக்கப்பட்டிருக்கும் அனைத்து நூதனங்களும் மறுக்கப்பட்டதாகும். இரண்டாவது அறிவிப்பில் மார்க்கத்தில் உருவான அனைத்து நூதனங்களையும் அதனை செய்பவரே உருவாக்கயிருந்தாலும், ஏற்கனவே உருவாகியிருந்தாலும் அனைத்தையும் விடும்படி வெளிப்படையாகவே கூறப்பட்டுள்ளது.
  7. தடுக்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்துச் செய்வதுடன், அதனால் ஏற்படும் பயன்பாடுகளையும் இல்லாதொழித்தல்.
  8. ஒன்றைத் தடுத்தல் என்பது அது செல்லுபடியற்றதாகி விடும் என்பதாகும். ஏனெனில் தடுக்கப்பட்ட அனைத்தும் மார்க்கத்திலுள்ளதல்ல, எனவே அவற்றைத் தவிர்ப்பது அவசியமாகும்.
மேலதிக விபரங்களுக்கு