عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ يَسَّرَ اللهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَاللهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ، وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ، وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللهِ يَتْلُونَ كِتَابَ اللهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمِ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ، وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللهُ فِيمَنْ عِنْدَهُ، وَمَنْ بَطَّأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2699]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
''யார் ஒரு முஃமினின் உலக துன்பமொன்றை நீக்கி விடுகிறாரோ, அல்லாஹ் அவருடைய மறுமை நாளின் துன்பமொன்றை நீக்குவான்;. யார் கஷ்டப்படும் ஒருவருக்கு இலகுபடுத்திக் கொடுக்கிறாரோ அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் அவருக்கு இலகு படுத்துவான். எவரொருவர் ஒரு முஸ்லிமுடைய குறையை மறைக்கின்றாரோ இம்மையிலும் மறுமையிலும்; அல்லாஹ் அவருடைய குறையை மறைக்கின்றான். அடியான் தன்னுடைய சகோதரனுக்கு உதவிசெய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அல்லாஹ்வும் அவனுக்கு உதவிசெய்து கொண்டிருக்கிறான். அறிவைத் தேடி யார் ஒரு பாதையில் பயணிக்கிறாரோ அதன் மூலம் அவருக்கு சுவர்க்கத்திற்கான பாதையை அல்லாஹ் இலகுபடுதிக் கொடுப்பான். இறையில்லங்களில் ஒன்றில் ஒரு கூட்டம் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் வேதத்தை ஓதி தங்களுக்கு மத்தியில் கற்றுக் கொண்டால் அவர்களின் மீது அமைதி இறங்கும் இறையருள் அவர்களை சூழ்ந்து கொள்ளும். மலக்குகள் அவர்களை சூழ்ந்து கொள்வார்கள். அவர்கள் குறித்து அல்லாஹ் தன்னிடம் இருப்போரிடம் சிலாகித்துக் கூறுவான். எவருடைய செயல் அவரைத் தாமதிக்கச் செய்கிறதோ அவரது பரம்பரை முன்னேற்றி விடமாட்டாது.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2699]
ஒரு முஸ்லிமுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும்; வெகுமதியானது அவர் பிற முஸ்லிம்களுக்கு செய்யும் அதே வகையான செயல்களைப் போலவே இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். யார் இவ்வுலகில் ஒரு விசுவாசியின் துன்பம் மற்றும் கஷ்டத்தை நீக்குகிறாரோ, அவருக்கு அல்லாஹ் மறுமை நாளின் துன்பத்திலிருந்து நிவாரணம் அளிப்பான். மேலும்,யார் கஷ்டத்தில் உள்ள ஒருவரின் கஷ்டத்தை எளிதாக்கி, அவருடைய சிரமத்தை நீக்குகிறாரோ, அவருக்கு அல்லாஹ் இம்மை மறுமை விவகாரங்களை அவருக்கு இலகுபடுத்திக்கொடுப்பான் . ஒரு முஸ்லிமிடம் காணப்படுகின்ற பகிரங்கப்படுத்தப்படுவத்துவதற்கு அவசியமல்லாத குறைகள் மற்றும் தவறுகளை அறிந்திருப்பவர் அக்குறைகளை மறைத்தால் அல்லாஹ் அவருடைய குறைகளை இம்மையிலும் மறுமையிலும் மறைப்பான். இம்மை மறுமை நலன்களில், ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அவ்வடியானுக்கு உதவி புரிபவனாக அல்லாஹ் இருக்கிறான். உதவி என்பது பிரார்த்தனை, உடல் ரீதியான மற்றும் பணரீதியான உதவி மற்றும் ஏனையவை இதில் உள்ளடங்கும். எவர் அல்லாஹ்வின் திருமுகம் நாடி மார்க்க அறிவைக் கற்கச் செல்கிறாரோ அதன் மூலம் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை இலகுபடுத்திக் கொடுக்கிறான். இறையில்லங்களில் ஒன்றில், ஒன்று சேர்ந்து, அல்லாஹ்வின் வேதத்தை ஓதி, தங்களுக்குள் அதை கற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்தாரின் மீது அமைதியும், பாதுகாப்பும் இறங்குவதோடு, அல்லாஹ்வின் அருளும், கருணையும் அவர்களைச் மூடிக்கொள்கிறது. மேலும் வானவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்வார்கள். அல்லாஹ் தனக்கு அருகில் இருப்பவர்களின் முன்னிலையில் அவர்களைப் பாராட்டுகிறான். இவ்வாறு அல்லாஹ் உயர்ந்த சபையில் அடியார்கள் பற்றிக் குறிப்பிடுவதே அவர்களின் சிறப்புக்கு போதுமானதல்லவா! நன்மையான செயல்கள் போதுமானதாக இல்லாத ஒருவர் நன்மையான செயல்களைச் செய்தவர்களின் தரத்திற்கு உயர்த்தப்பட மாட்டார். எனவே, அவர் தனது வம்சாவளி அந்தஸ்த்தையும்;;, தனது முன்னோர்களின் கௌரவத்தையும் நம்பி, நன்மையான செயல்களைச் செய்வதில் அலட்சியமாக இருக்கக் கூடாது.