ஹதீஸ் அட்டவணை

1. நபி (ஸல்) அவர்கள், தாம் காலணி அணிந்து கொள்ளும் போதும் தலைவாரிக் கொள்ளும் போதும் சுத்தம் செய்யும் போதும் தம் அனைத்து வேலைகளிலும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
2. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், தமது சிறுநாக்குத் தென்படும் அளவு வாயைத் திறந்து பலமாக சிரித்ததை நான் கண்டதில்லை. மாறாக, புன்முறுவலாகவே சிரிப்பார்கள் - 2 ملاحظة
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
3. உங்களுக்கு எதிராக துஆ செய்யாதீர்கள்.உங்களின் குழந்தைகளுக்கு எதிராகவும் துஆ செய்யாதீர்கள், இவ்வாறு துஆ செய்வதன் மூலம் நீங்கள் அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டு உங்களுக்கு அவன் துஆ ஏற்கின்ற அந்த நேரத்திற்கு உட்பட்டு வேண்டாம்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
4. ஒரு மனிதர் விருப்பமான ஒரு கனவைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது. எனவே, அவர் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, அதை (மக்களுக்குக்) கூறவும். அவ்வாறல்லாமல் வெறுக்கும் ஏதாவதொன்றைக் கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வரும். அதன் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதுடன், யாரிடமும் அதைக் கூறாமலிருக்கட்டும். அப்போது, அது அவருக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தமாட்டாது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
5. “யார் இரு பெண் பிள்ளைகளை பருவ வயது வரை பொறுப்பேற்று, வளர்க்கின்றாரோ, அவர் மறுமையில் என்னோடு இப்படி வருவார்” என்று கூறிவிட்டு தமது விரல்களை இணைத்துக்காட்டினார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
6. விசுவாசிகளுக்கு - அல்லது என்னுடைய சமுதாயத்திற்கு- சிரமமாக இருக்கும் என்று இல்லையென்றிருந்தால், ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தியிருப்பேன்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
7. அடியார்கள் காலையை அடையும் ஒவ்வொரு நாளிலும், இரு மலக்குகள் இறங்கி, ஒருவர் "யா அல்லாஹ்! தர்மம் கொடுப்பவருக்கு பதிலாக மேலும் கொடுப்பாயாக" என்றும், மற்றவர், "யா அல்லாஹ்! தர்மம் செய்யாமல் வைத்துக்கொள்பவருக்கு அழிவைக் கொடுப்பாயாக" எனவும் பிரார்த்திப்பார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
8. “இயன்றவரை சரியான அமல்களையே செய்யுங்கள். உங்களில் யாரும் தனது அமல்களால் மாத்திரம் தப்பிக்கமுடியாது என்பதை அறிந்துகொள்ளுங்கள்” அப்போது நபித்தோழர்கள், “நீங்களுமா? அல்லாஹ்வின் தூதரே” எனக் கேட்டபோது, “நானும் தான். அல்லாஹ் தனது அருளாலும், பேருபகாரத்தாலும் என்னை மறைத்துக் கொண்டாலே தவிர (என்னாலும் தப்பமுடியாது)” என்று கூறினார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
9. யா அல்லாஹ்! உன் திருப்தியைக் கொண்டு உனது கோபத்தை விட்டும், உன்னிடமுள்ள ஈடேற்றத்தைக் கொண்டு உன் தண்டனையை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். உன்னைக் கொண்டே, உன்னை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். நீ உன்னைப் புகழ்ந்தது போல, என்னால் உன்னைப் புகழ்ந்து முடிக்க முடியாது - 2 ملاحظة
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
10. 'சுவனவாதிகளை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? பலவீனமான, பணிவாக நடக்கும் ஒவ்வொருவரும் (சுவனவாதிகள் தாம்). அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்து விட்டால், அதை அல்லாஹ் நிறைவேற்றிவிடுவான். நரகவாதிகளை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? வன்மையான, பெருமைபிடித்த, கர்வம் கொண்ட ஒவ்வொருவரும் (நரகவாதிகள் தான்)'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
11. ‘‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும், ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ (அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தான்) என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும்”
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
12. நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து வருபவையாகும். கெட்ட கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருபவையாகும். உங்களில் யாராவது பயங்கரமான ஓர் கெட்ட கனவைக் கண்டால், தனது இடப்பக்கம் உமிழ்ந்துவிட்டு, அதன் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்கட்டும். அப்போது அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தமட்டாது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
13. நான், 'அல்லாஹ்வின் தூதரே! வெற்றி எவ்வாறு?' எனக் கேட்டபோது, 'உனது நாவை உன் கட்டுப்பாட்டுள் வைத்துக்கொள்! உனது வீடு உனக்கு விசாலமாக இருக்கட்டும், உன் பாவங்களை நினைத்து அழு' என்று பதிலளித்தார்கள் நபியவர்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
14. என் அடியான் என்னைப் பற்றி நினைக்கும் இடத்தில் நான் உள்ளேன். அவன் என்னை நினைவுபடுத்தும் போது நான் அவனோடு உள்ளேன் - 6 ملاحظة
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
15. நான் ஆஇஷா (ரழி) அவர்களிடம், “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வீட்டினுள் நுழைந்ததும் முதலில் என்ன செய்வார்கள்?" எனக் கேட்டதற்கு, "பல் துலக்குவார்கள்" என்றார்கள் அவர்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
16. இரவிலிருந்து காலை வரை உறங்கிய ஒரு மனிதரைப் பற்றி நபியவர்களிடம் கூறப்பட்ட போது, "அம்மனிதனின் இரு காதுகளிலும் (அல்லது ஒரு காதில்) ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்." என்று கூறினார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
17. நபி (ஸல்) அவர்கள் இறுதி பத்துத் தினங்களிலும் ஏனைய தினங்களில் இல்லாத அளவு முயற்சிப்பார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
18. ஓர் அடியான் இன்னோர் அடியானின் குறையை மறைத்தால், அல்லாஹ் மறுமையில் அவரின் குறையை மறைப்பான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
19. உங்களில் எவரும் அல்லாஹ்வைப் பற்றிய நல்லெண்ணம் கொண்ட நிலையிலேயே தவிர மரணிக்கவேண்டாம்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
20. 'நீங்கள் கூறுவது போன்றே நீங்கள் இருந்தால், அவர்களது வாய்களில் சூடான சாம்பலைப் போடுவது போன்ற வேலையையே நீங்கள் செய்கின்றீர்கள். நீங்கள் இவ்வாறே இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கெதிராக உங்களுக்கு உதவும் ஒருவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இருந்துகொண்டே இருப்பார்.'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
21. ஓர் அடியானின் இரு கால் பாதங்களுக்கும் அல்லாஹ்வின் பாதையில் புழுதி படிந்தால், அவற்றை நரகம் தீண்டமாட்டாது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
22. ((ஒரு கூட்டத்தினர் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை (திக்ர்) நினைவுகூறாமல் எழுந்து செல்வது செத்த கழுதையை விட்டும் எழுந்து செல்வது போலாகும் . அது அவர்களுக்குக்கு (மறுமையில்) பேரிழப்பாக அமையும்))
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
23. 'தனது ரப்பை நினைவுகூறுபவனுக்கும், தனது ரப்பை நினைவுகூறாதவனுக்கும் உதாரணம், உயிருள்ளவனும் உயிரற்றவனும் ஆகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
24. “எனக்குப் பின் உங்களுக்கிடையே உலக வளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்துவிடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்” - 2 ملاحظة
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
25. யாராவது ஒருவருக்கு, அல்லாஹ் தன்னை மறுமையின் துன்பங்களில் இருந்து பாதுகாப்பது மகிழ்ச்சியைத் தரும் என்றிருந்தால், அவர் கஷ்டத்தில் இருக்கும் ஒரு கடனாளிக்கு அவகாசம் கொடுக்கட்டும், அல்லது தள்ளுபடி செய்யட்டும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
26. நரகவாதிகளில் குறைந்த தண்டனை உள்ளவர், நெருப்பினால் ஆன இரு செருப்பக்களும், இரு செருப்பு வார்களும் உள்ளவராவார். இவ்விரண்டின் காரணமாக அவரது மூளை, செம்புச் சட்டிகள் கொதிப்பது போன்று கொதிக்கும். அவரை விடக் கடுமையான வேதனைகொண்ட யாரும் இருக்கமாட்டார்கள் என்று அவர் நினைப்பார். ஆனாலும், அவர்தான், மிகைக்குறைந்த தண்டனை உரியவர்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
27. “இறைநம்பிக்கையாளர் அவருடைய இறைவனுக்கருகில் கொண்டுவரப்படுவார். அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்ள வைப்பான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
28. அதற்கு நபியவர்கள் 'உலக வாழ்க்கையில் பற்றற்றவராக இருங்கள், அல்லாஹ் உம்மை நேசிப்பான். மக்களிடம் இருப்பவற்றில் ஆசைகொள்ளாதீர்கள், அவர்கள் உம்மை நேசிப்பார்கள்.' எனப்பதிலளித்தார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
29. 'நன்மை என்பது நற்குணமாகும். பாவம் என்பது உனது உள்ளத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்தும். மக்கள் அதைக் காண்பதை நீ வெறுப்பாய்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
30. பனூ இஸ்ராஈல்கள் மீது நபிமார்கள் ஆட்சி செய்து வந்தனர்.ஒரு நபி இறந்து விட்ட போது இன்னொரு நபி அவருக்குப் பிரதிநிதியாக ஆகினார் ஆனால் நிச்சயமாக எனக்குப் பின்னர் இன்னொரு நபியில்லை.எனினும் எனக்குப் பின்னர் கலீபாக்கள் அதிகம் தோன்றுவர்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
31. பிரச்சினைகள்,குழப்பங்கள் நிறைந்த காலத்தில் இபாதத்தில் ஈடுபாடு கொள்வது என்னிடம் இடம் பெயர்ந்து வருவது போன்றதாகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
32. நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதில் எழுபதாயிரம் கடிவாளங்கள் இடப்பட்டிருக்கும்.ஒவ்வொரு கடிவாளத்தையும் எழுபதாயிரம் மலக்குகள் இழுத்துக் கொண்டு வருவர். - 1 ملاحظة
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
33. அதிகமாக சாபமிடுவோர் நிச்சயமாக மறுமை நாளில் சிபாரிசு செய்கின்றவர்களாகவும், சாட்சி கூறுகின்றவர்களாவும் இருக்க மாட்டார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
34. நிச்சயமாக உங்களின் இரட்சகன் நாணமுடையவனும்,கொடை வள்ளலுமாவான் எனவே தன் அடியான் அவனின் இரண்டு கைகளையும் தன்னிடம் உயர்த்துகின்ற போது அதனை வெறுமையாக திருப்பி விடுவதையிட்டு அவன் வெற்கப்படுகின்றான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
35. ஒரு கூட்டம் ஓரிடத்தில் அமர்ந்து அல்லாஹ்வை நினைவு கூறாமலும்ந நபி (ஸல்) அவர்களின் மீதுஸலவாத் கூறாமலும் இருந்தால் கியாமத் நாளில்அவர்களுக்குஅது கைசேதமாக அமையும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
36. எழுது கோள் மூவரை விட்டும் உயர்தப்படுகிறது: (மூவரின் செயல்கள் பதியப்படுவதில்லை) தூங்குபவர் விழித்தெழும்வரை, சிறுவன் பருவவயதை அடையும் வரை, புத்திசுவாதின மற்றவர் அவரின் புத்தி தெளியும் வரை - 2 ملاحظة
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
37. அல்லாஹ் ' உங்களுக்கும் தர்மம் செய்யக் கூடியவற்றை அருளவில்லையா?" ஒவ்வொரு 'தஸ்பீஹும்'; (ஸுப்ஹானல்லாஹ்) ஒரு தர்மமாகும் (ஸதகாவாகும் ). ஒவ்வொரு தக்பீரும்' (அல்லாஹு அக்பர்) ஒரு ஸதகாவாகும். ஒவ்வொரு தஹ்லீலும் (லாஇலாஹ இல்லல்லாஹ்) ஒரு ஸதகாவாகும்.ஒரு நன்மையை ஏவுவதும் ஸதகா. ஒரு தீமையை தடுப்பதும் ஸதகா. உங்கள் மனைவியரோடு உடலுறவுகொள்வதும் ஸதகா - 2 ملاحظة
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
38. ''யார் ஒரு முஃமினின் உலக துன்பமொன்றை நீக்கி விடுகிறாரோ, அல்லாஹ் அவருடைய மறுமை நாளின் துன்பமொன்றை நீக்குவான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
39. 'ரமழான் வந்துவிட்டால், சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டுவிடும். நரகத்தின் வாயில்கள் மூடப் பட்டுவிடும். ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு விடுவர்.'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது