عن قيس بن عاصم رضي الله عنه قال:
أتيتُ النبيَّ صلى الله عليه وسلم أُريدُ الإسلامَ، فأَمَرَني أن أغتَسِلَ بماءٍ وسِدرٍ.

[صحيح] - [رواه أبو داود والترمذي والنسائي]
المزيــد ...

கைஸ் இப்னு ஆஸிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:
நான் நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவதற்காக வந்தேன் அப்போது நபியவர்கள் நீர் மற்றும் இலந்தை இலையைக் கொண்டு குளித்துவருமாறு எனக்குப் பணித்தார்கள்

ஸஹீஹானது-சரியானது - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவதற்காக கைஸ் இப்னு ஆஸிம் அவர்கள் வந்தார்கள் அப்போது நபியவர்கள் நீர் மற்றும் சுத்தப்படுத்திக்கொள்வதற்காக உபயோப்படுத்தும் நறுமணம் நிறைந்த இலந்தை மரத்தின் இலையைக் கொண்டு குளித்துவருமாறு எனக்குப் பணித்தார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ஒரு காபிர் இஸ்லாத்தில் நுழையும் போது குளித்தல் மார்க்கத்தில் உள்ளதாகும்.
  2. உடல் மற்றும் ஆன்மாவிற்கான இஸ்லாத்தின் கரிசனையானது அதன் மேன்மையை எடுத்தியம்புகிறது.
  3. சுத்தமான நீரில் சுத்தமான பொருட்கள் கலப்பது அதன் இயல்பான சுத்தத்தில் எவ்விதப்பாதிப்பையும் ஏற்படுத்திவிடமாட்டாது.
  4. வாசணை நிறைந்த ஸித்ர் மர இலையின் இடத்தில் தற்போது நறுமண சோப்புகளை அது போன்றவைகளை தற்போது பயன்படுத்திட முடியும்.