عَنْ عَائِشَةَ أُمِّ المؤمنين رضي الله عنها قَالَتْ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، غَسَلَ يَدَيْهِ، وَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ، ثُمَّ اغْتَسَلَ، ثُمَّ يُخَلِّلُ بِيَدِهِ شَعَرَهُ، حَتَّى إِذَا ظَنَّ أَنَّهُ قَدْ أَرْوَى بَشَرَتَهُ، أَفَاضَ عَلَيْهِ المَاءَ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ سَائِرَ جَسَدِهِ، وَقَالَتْ: كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، نَغْرِفُ مِنْهُ جَمِيعًا.
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...
உம்முல் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்;.
'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளுச் செய்வது போல் உளுச் செய்வார்கள்.பி;ன்னர் அவர்கள் குளிப்பார்கள் பின்னர் விரல்களால்; தலை முடியின் அடிப்பாகம் நனையுமளவிற்கு கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்.' நானும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். நாங்கள் இருவரும் சேர்ந்து பாத்திரத்திலிருந்து தண்ணீரை அள்ளுவோம்' என ஆயிஷா(ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
'நபிஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்ற நாடினால் தனது இரு கைகளையும் முதலில் கழுபவர்களாக இருந்தார்கள். பின்னர்; தொழுகைக்கு வுழூச் செய்வது போல் வுழூச் செய்வார்கள் பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள் பின்னர் தனது தலைமுடியின் அடிப்பாகத் தோல் நனையும் வரை இரு கைகளினாலும் கோதுவார்கள்.பின்னர் தலையின் மீது மூன்று முறை நீரை ஊற்றிவிட்டு பின்னர் உடலின் எஞ்சிய எல்லாப்பகுதிகளையும் கழுவுவார்கள் நானும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். நாங்கள் இருவரும் சேர்ந்து பாத்திரத்திலிருந்து தண்ணீரை அள்ளுவோம்' என ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்.