عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ».

[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
'யார் என்மீது (நான் கூறியதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்'

ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

'யார் நபி மீது வேண்டுமேன்றே பொய்யாக ஒரு வார்த்தை அல்லது செயலை நபி கூறியதாக கூறுகின்றாரோ மறுமையில் அவரின் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும் அதுவே நபி மீது பொய்யுரைத்ததற்கான கூலியாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்ள்'.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு உருது இந்தோனேஷியன் போஸ்னியன் சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா மலயாளம் ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து بشتو الأسامية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது வேண்டுமென்று பொய்யுரைப்பது நரகத்தில் நுழைவதற்கான வழிகளில் ஒன்றாகும்.
  2. நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது பொய்யுரைப்பது என்பது ஏனைய மனிதர்கள் விடயத்தில் பொய்யுரைப்பது போன்றதன்று. காரணம் நபி மீது பொய்யுரைப்தன் விளைவாக இம்மை மற்றும் மார்க்க விவகாரங்களில் பெரும் தீங்கை ஏற்படுத்திவிடும்.
  3. ஹதீஸ்களின் சரியான தன்மையை உறுதிப்படுத்தி அது நபியவர்களின் கூறினார்களா என்பதை திட்டப்படுத்திக்கொள்ள முன்அவற்றைப் பரப்புவது குறித்த எச்சரிக்கை இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளமை.
மேலதிக விபரங்களுக்கு