عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «ليس شيءٌ أكرمَ على الله من الدعاء».
[حسن] - [رواه الترمذي وابن ماجه وأحمد]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் : "பிரார்த்தனையை விட அல்லாஹ்விடம் மிக கண்ணியத்திற்குரிய விடயம் வேறு ஏதுமில்லை".
ஹஸனானது-சிறந்தது - இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்
பிரார்த்தனையை விட அல்லாஹ்விடம் மிக கண்ணியத்திற்குரிய விடயம் வேறு ஏதுமில்லை, ஏனெனில் அதுவே ஒரு வணக்கமாகும், அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்திருப்பது அவனை வணங்கவே, அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது அவனது ஆற்றல், விசாலமான அறிவு, பிரார்த்தனை புரிபவனின் இயலாமை, அவனது தேவை என்பவற்றை உணர்த்துகின்றது. இதனால்தான் பிரார்த்தனை அல்லாஹ்விடம் மிக கண்ணியத்திற்குரிய விடயமாக உள்ளது.