عن جرير بن عبد الله رضي الله عنه مرفوعاً: «مَنْ لا يَرْحَمِ النَّاسَ لا يَرْحَمْهُ اللهُ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறுகின்றார்கள் : "மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான். இங்கு மக்கள் என்ற வார்த்தை விசுவாசிகள், நிராகரிப்பாளர்களில் ஒப்பந்தக்காரர்கள் போன்ற இரக்கம் காட்டத் தகுதியுடையோரையே குறிக்கின்றது.(எப்போதும் முஸ்லிம்களை எதிர்த்துப்) போராடும் நிராகரிப்பாளர்கள் இரக்கம் காட்டப்பட மாட்டார்கள், மாறாக (போர்க்களத்தில்) கொல்லப்படுவார்கள். ஏனெனில் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களையும், நபித்தோழர்களையும் வர்ணிக்கும் போது பின்வருமாறு கூறுகின்றான் : "அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்". (பத்ஹ் : 29).