عن أبي ذر الغفاري رضي الله عنه مرفوعاً: «لا تَحْقِرَنَّ من المعروف شيئا، ولو أن تَلْقَى أخاك بوجه طَلْق».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் அல்கிஃபாரி (ரலி) அவர்கள் கூறினார்கள் : "நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
ஒருவரை சந்திக்கும் போது புன்முறுவல் பூப்பது ஸுன்னா என்பதற்கு இந்நபிமொழி ஆதாரமாகவுள்ளது. இதன் மூலம் தனது சகோதர முஸ்லிமுக்கு அன்பு காட்டி, மகிழ்விக்க முடியுமென்பதால் அற்பமாகக் கருதாமல் ஆர்வத்துடன் செய்ய வேண்டிய நற்கருமங்களில் இதுவும் ஒன்றாகும்.