عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا تَبْدَؤوا الْيَهُودَ وَلَا النَّصَارَى بِالسَّلَامِ، فَإِذَا لَقِيتُمْ أَحَدَهُمْ فِي طَرِيقٍ فَاضْطَرُّوهُ إِلَى أَضْيَقِهِ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2167]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
யூத, கிறிஸ்தவர்களுக்கு நீங்கள் முந்திக்கொண்டு ஸலாம் கூறாதீர்கள். அவர்களில் ஒருவரைப் பாதையில் கண்டால், நெருக்கடியான ஒரு பகுதிக்குச் செல்ல அவர்களை நிர்ப்பந்தியுங்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2167]
இறைநிராகரிப்பாளர்கள் ஒரு புறம் இருக்க, யூத, கிறிஸ்தவர்கள் - திம்மிகளாக இருந்தாலும் - அவர்களுக்கு நாமாக முந்திக்கொண்டு ஸலாம் சொல்வதை நபியவர்கள் தடுக்கின்றார்கள். மேலும், அவர்களில் ஒருவரை நாம் பாதையில் கண்டால், பாதையின் ஓரத்திற்கு அவரைத் தள்ளிவிடுமாறும் அறிவுறுத்துகின்றார்கள். பாதையின் மத்தியில் நடந்துசெல்லவேண்டியவன் ஒரு முஃமின் மாத்திரமே! ஒதுங்கிப் போக வேண்டியவன் நிராகரிப்பாளனே! எந்த நிலையிலும் ஒரு முஸ்லிம் தாழ்ந்தவனாக இருக்கக் கூடாது.