عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«سَوُّوا صُفُوفَكُمْ، فَإِنَّ تَسْوِيَةَ الصَّفِّ مِنْ تَمَامِ الصَّلَاةِ».

[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 433]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹுஅறிவித்துள்ளார்கள்:
'(தொழுகையில்) உங்களது அணிகளை சீர் செய்து கொள்ளுங்கள்,ஏனெனில் அணியை சீர் செய்து கொள்வதிலேயே தொழுகையின் பூரணத்துவம் தங்கியுள்ளது.

[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [முஸ்லிம் - 433]

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்கள் கூட்டாகத் தொழக்கூடியவர்களுக்கு தங்களது அணிகளை சீர் செய்து கொள்ளுமாறு பணிப்பார்கள். அவர்களில் ஒருவர் மற்றொரு வரை முந்தி நிற்காது அணியைச் சீர் செய்து கொள்ளுமாறும் பணிப்பார்கள். மேலும்; அணியை சீர் செய்து கொள்வதில் தொழுகையின் பூரணத்துவம் தங்கியுள்ளது. அணி வளைந்து கோணலாக இருப்பது தொழுகையில் ஒரு வகை முறைகேட்டையும் குறையையும் ஏற்படுத்திவிடும். .

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. தொழுகையை பூரணத்துவப்படுத்தும் விடயங்களில் கவனம் செலுத்துவதும் அதில் குறைகளை ஏற்படுத்தும் விடயங்களலிருந்து விலகி இருப்பதும் ஷரீஆ வலியுறுத்தும் விடயமாகும்.
  2. கற்பித்தலில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்களிடம் காணப்பட்ட மதிநுட்பம், அதாவது மக்கள் கட்டுப்பட்டு நடப்பதை ஊக்குவிக்கவும் ஷரீஆ சட்டத்தில் உள்ள நுனுக்கத்தை தெளிவுபடுத்தும் நோக்குடனும்; ஒரு சட்டத்தை அதன் காரணத்துடன் இணைத்துக் குறிப்பிடும் திறமையை பெற்றிருந்தமை.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (54)
மேலதிக விபரங்களுக்கு