عَنْ وَابِصَةَ رضي الله عنه:
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا صَلَّى وَحْدَهُ خَلْفَ الصَّفِّ، فَأَمَرَهُ أَنْ يُعِيدَ صَلَاتَهُ.

[حسن] - [رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد] - [مسند أحمد: 18000]
المزيــد ...

வாபிஸா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஒரு மனிதன் வரிசைக்குப் பின்னால் தனித்து நின்று தொழுவதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுகையை மீட்டுமாறு அவருக்கு ஏவினார்கள்.

[நம்பகமானது (ஹஸன்)] - [இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்] - [முஸ்னத் அஹ்மத் - 18000]

விளக்கம்

ஒரு மனிதன் வரிசைக்கு பின்னால் தனித்து நின்று தொழுவதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை மீட்டுமாறு அவரிடம் ஏவுகின்றார்கள். இவ்வாறு அவர் தொழுத தொழுகை நிறைவேறவில்லை என்பதே அதன் காரணமாகும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. கூட்டுத் தொழுகைக்காக நேரகாலத்துடன், முதலிலேயே வர ஆர்வமூட்டல். வரிசைக்குக் பின்னால் தனித்து நின்று தொழுது, தொழுகையை செல்லுபடியற்றதாக ஆக்கிக் கொள்ளாமல் இருக்க அறிவுறுத்தல்.
  2. இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: வரிசைக்கு பின்னால் தனித்து நின்று யாராவது தொழுகையை ஆரம்பித்து, ருகூவில் இருந்து எழும்ப முன்னர் வரிசையில் சேர்ந்து கொண்டால், - அபூ பக்ரா (ரழி) அவர்களது ஹதீஸில் உள்ள பிரகாரம் - மீட்டவேண்டியதில்லை. அவ்வாறில்லாவிட்டால், இந்த ஹதீஸின் அடிப்படையில் மீட்டவேண்டும்.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (44)
மேலதிக விபரங்களுக்கு