عَنْ ‌أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِذَا وَجَدَ أَحَدُكُمْ فِي بَطْنِهِ شَيْئًا، فَأَشْكَلَ عَلَيْهِ أَخَرَجَ مِنْهُ شَيْءٌ أَمْ لَا، فَلَا يَخْرُجَنَّ مِنَ الْمَسْجِدِ حَتَّى يَسْمَعَ صَوْتًا، أَوْ يَجِدَ رِيحًا».

[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக கூறினார்கள் :
'உங்களில் ஒருவருக்கு வயிற்றில் ஏதாவது (சத்தம்) கேட்டு ஏதும் காற்று வெளியேறியதா இல்லையா எனும் சந்தேககம் ஏற்பட்டால்;,'அவர் சத்தத்தைக் கேட்காத அல்லது காற்று வெளியேறியதாக உணராத வரை (தொழுகையை முறித்து) பள்ளியை விட்டு வெளியேறாதீர்கள்

ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுபவருக்கு வயிற்றில் ஏதாவது ஏற்பட்டு காற்று வெளியேறியதா இல்லையா என்ற குழப்பம் -தடுமாற்றம் ஏற்பட்டால் வுழுவை முறிக்கக்க கூடிய தொடக்கு ஏற்பட்டுள்ளது என உறுதியாக அறியும் வரையில் அவர் தனது தொழுகையை விட்டுவிட்டு மீண்டும் வுழு செய்;வதற்காக செல்ல வேண்டாம் என இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அவர் அவ்வாறு தொழுகையை முறித்துக்கொள்வதற்கு காற்றின் சப்தத்தையோ அல்லது காற்றின் நாற்றத்தையோ நுகர வேண்டும்.காற்று வெளியேற வில்லை என உறுதியான நம்பிக்கையுடன் இருக்கும் ஒருவருக்கு ஏற்படும் சந்தேகம் அவரின் உறுதியை பாதிக்கமாட்டாது.இந்த அடிப்படையி;ல்; அவர் சுத்தமாக இருக்கிறார் என்ற நம்பிக்கையே முதன்மைப்படுத்தப்படும் தொடக்கு ஏற்பட்டது என்ற இடையில் ஏற்பட்ட சந்தேகமானது உறுதியற்றது என்பதனால் அதனை விட்டு விட வேண்டும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இந்த ஹதீஸானது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகவும் சட்டவாக்க விதிகளில் ஒன்றாகவும் கருதப்படுகின்ற ' இடையில் ஏற்பட்ட ஒரு சந்தேகம் ஏலவே உள்ள உறுதியான முடிவை மாற்றாது' என்ற விதியை உள்ளடக்கியுள்ளது.அடிப்படை-மூலம் என்பது அதற்கு முரணான ஒன்று உறுதியானது என்று நிரூபிக்கப்படும் வரையில் அதே நிலையில் இருக்கும்.
  2. தொழுபவர் தனக்கு தொடக்கு ஏற்படவில்லை என்ற உறுதியோடு இருக்கும் வரையில் சந்தேகம் வுழு முறியாது தூய்மையாக இருத்தல் என்பதில் எவ்விதப்பாதிப்பையும் ஏற்படுத்திட மாட்டாது.