عَنْ ‌عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ رضي الله عنه:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ.

[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்;ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுவின் உறுப்புக்களை இரு முறை கழுவி வுழு செய்தார்கள்

ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

சில வேளை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுசெய்தால் வுழுவின் உறுப்புக்களை இரு தடவைகள் கழுவக்ககூடியவராக இருந்தார்கள்.அதாவது முகம் வாய்க்கொப்பளித்தல் நாசுக்கு நீர் செலுத்துதல் உள்ளடங்களாக முகம்,இருகைகள், மற்றும் இருகால்களை இரு தடவைகள் கழுவினார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. வுழுவின் உறுப்புகளை ஒவ்வொரு தடவை கழுவுவதே கடமையாகும்-வாஜிபாகும் அதற்கு மேலதிகமாக -இரு முறை- கழுவுவது முஸ்தஹப்பாகும்
  2. சில வேளைகளில் இரு தடவைகள் வுழுவின் உறுப்புகளை கழுவி வுழு செய்வது மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட விடயமாகும்.
  3. தலையில் ஒரு தடவை மஸ்ஹு -ஈரக்கைகளால் தடவுதல்- செய்தல் ஷரீஆவின் வழிகாட்டலாகும்.