عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ افْتَقَدَ ثَابِتَ بْنَ قَيْسٍ، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، أَنَا أَعْلَمُ لَكَ عِلْمَهُ، فَأَتَاهُ فَوَجَدَهُ جَالِسًا فِي بَيْتِهِ، مُنَكِّسًا رَأْسَهُ، فَقَالَ: مَا شَأْنُكَ؟ فَقَالَ شَرٌّ، كَانَ يَرْفَعُ صَوْتَهُ فَوْقَ صَوْتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَدْ حَبِطَ عَمَلُهُ، وَهُوَ مِنْ أَهْلِ النَّارِ، فَأَتَى الرَّجُلُ فَأَخْبَرَهُ أَنَّهُ قَالَ كَذَا وَكَذَا، فَرَجَعَ الْمَرَّةَ الْآخِرَةَ بِبِشَارَةٍ عَظِيمَةٍ، فَقَالَ: «اذْهَبْ إِلَيْهِ فَقُلْ لَهُ: إِنَّكَ لَسْتَ مِنْ أَهْلِ النَّارِ، وَلَكِنْ مِنْ أَهْلِ الْجَنَّةِ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார் :
(ஒரு முறை) நபி(ஸல்லல்லலஹு அலைஹிவஸல்லம் அவர்கள், ஸாபித் இப்னு கைஸ்(ரழி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் அவரைப் பற்றிய செய்தியை அறிந்து கொண்டு தங்களிடம் வருகிறேன். என்று சொல்லிவிட்டு ஸாபித் இப்னு கைஸ்(ரழி) அவர்களிடம் சென்றார். ஸாபித் இப்னு கைஸ்(ரழி) தம் வீட்டில் தலையைக் (கவலையுடன்) கவிழ்த்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டார். 'உங்களுக்கு என்ன ஆயிற்று? என்று அவரிடம் கேட்டதற்கு அவர், '(பெரும்) தீங்கு ஒன்று நேர்ந்துவிட்டது. நான் நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குரலை விட என்னுடைய குரலை உயர்த்தி(ப் பேசி) வந்தேன். எனவே, என் நற்செயல்கள் வீணாகி விட்டன. நான் நரகவாசிகளில் ஒருவனாகி விட்டேன்' என்று பதிலளித்தார். உடனே, அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஸாபித் இப்படியெல்லாம் கூறினார் என்று தெரிவித்தார்.அடுத்த முறை அந்த மனிதர் (பின்வரும்) மாபெரும் நற்செய்தியுடன் திரும்பிச் சென்றார். (அதாவது அம்மனிதரிடம்) நபி(ஸல்) அவர்கள் 'நீ ஸாபித் இப்னு கைஸிடம் சென்று, 'நீங்கள் நரகவாசிகளில் ஒருவரல்லர்; மாறாக, சொர்க்க வாசிகளில் ஒருவரே' என்று சொல் என்று கூறினார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸாபித் இப்னு கைஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சபையில் காணவில்லை அதனால் அவரைப்பற்றி விசாரித்தார்கள்.அப்போது ஒரு மனிதர் நான் அவர் பற்றிய செய்தியையும் அவர் சபைக்கு சமூகம்தராததிற்கான காரணத்தையும் அறிந்து வருகிறேன் என்று கூறிவிட்டு ஸாபித் இ;பனு கைஸிடம் சென்றார் அவரே தலையை கவிழ்த்த நிலையில் சோகத்துடன் அவரின் வீட்டில் இருப்பதைக் கண்டார்.பின்னர் அவரிடம் உமக்கு என்ன நேர்ந்தது எனக் கேட்க அவருக்கு பெரும் நாசம் -தீங்கு – ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார் அதாவது தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சப்தத்திற்கு அதிகமாக தனது குரலை உயர்த்திப் பேசுகிறேன்;,அவ்வாறு குரலை உயர்த்திப்பேசுவோரின் அமல்கள் அழிந்து போவதாக அல்லாஹ் எச்சரித்துள்ளான் ஆகையால் எனது அமல்கள் வீணாகி நான் நரகவாதிகளுள் ஒருவனாக மாறிவிட்டேன் என்று அவரிடம் கூறினார் அதன் காரணமாகவே இவ்வாறு கவளைத்தோய்ந்த நிலையில் உளளேன் என்றார்.
உடனே அந்த மனிதர் நபியவரகளிடம் வந்து அவர் கூறியதைத் தெரிவித்தார்.அதற்கு நபியர்கள் ஸாபித் அவர்களிடம் உடன் திரும்பிச் சென்று அவர் நரகவாதியல்ல என நற்செய்தியை அவரிடம் கூறிவிடு எனப்பணித்தார்கள். காரணம் அவரின் சப்பதம் அதிகமாக இருப்பது அவரின் இயற்கையில் அமைந்த விடயம்.மேலும் அவரே அல்லாஹ்வின் தூதர் அவர்களினதும்,அன்ஸரிகளினதும் பேச்சாளரகத் திகழ்ந்தார்கள்.