عَنِ الحُسَينِ بنِ عَلِيٍّ بنِ أَبِي طَالِبٍ رضي الله عنهما قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْبَخِيلُ مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ».
[صحيح] - [رواه الترمذي والنسائي في الكبرى وأحمد] - [السنن الكبرى للنسائي: 8046]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஹுஸைன் இப்னு அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
எனது பெயர் ஒருவனிடம் கூறப்பட்டும், என் மீது ஸலவாத் சொல்லாமல் இருப்பவனே, உண்மையில் கஞ்சனாகும்.
[ஸஹீஹானது-சரியானது] - [رواه الترمذي والنسائي في الكبرى وأحمد] - [السنن الكبرى للنسائي - 8046]
நபியவர்கள், தமது பெயரையோ, புனைப்பெயரையோ, வர்ணனையையோ கேட்டும் ஸலவாத் சொல்லாமல் இருப்பதை எச்சரிக்கும் விதமாக, 'முழுமையான கஞ்சன் யாரென்றால், எனது பெயர் நினைவுபடுத்தப்பட்டும் ஸலவாத் கூறாதவனே' என்று கூறுகின்றார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு:
முதலாவது, இது அற்பத்தில் கஞ்சத்தனம் காட்டுவதாகும். இதனால் அவருக்கு குறைவாகவோ, கூடுதலாகவோ நட்டம் ஏற்படுவதில்லை. இதற்கு அவர் பணத்தையோ, முயற்சியையோ செலவளிக்கவேண்டியதில்லை.
இரண்டாவது, இவர் தனக்குத் தானே கஞ்சத்தனப்பட்டுக்கொண்டு, நபியவர்களுக்கு ஸலவாத் சொல்வதால் கிடைக்கும் நன்மைகளைத் தவறவிடுகின்றார். ஏனெனில், இவர் ஸலவாத் சொல்லாமல் இருப்பதால், நபியவர்களின் ஏவலின் பிரகாரம் தன் மீது கடமையாகியுள்ள, தனக்கு நன்மைகளைப் பெற்றுத் தரும் ஒரு கடமையை நிறைவேற்றாமல் கஞ்சத்தனம் காட்டுகின்றார்.
மூன்றாவது, நபியவர்கள் மீது ஸலவாத் சொல்வதன் மூலம், அவர்களுக்கு நிறைவேற்றவேண்டிய சில கடமைகள் நிறைவேற்றப்படுகின்றது. ஏனெனில், அவர்களே எமக்கக் கற்றுத் தந்தவர்கள், அவர்களே எமக்கு வழிகாட்டியவர்கள். அவர்களே எம்மை அல்லாஹ்வை நோக்கி அழைத்தவர்கள். இந்த வஹியையும், இந்த ஷரீஆவையும் கொண்டு வந்தவர்கள் அவரே! அல்லாஹ்வுக்கு அடுத்ததாக, எமக்கு நேர்வழி கிடைக்க அவர்கள் தாம் காரணமாக இருந்துள்ளார்கள். எனவே, நபியவர்கள் மீது ஸலவாத் சொல்லாதவன், தனக்குத் தானே கஞ்சத்தனம் காட்டிக்கொள்வது மாத்திரமால்லாமல், நபியவர்களுக்குச் செய்ய வேண்டிய மிகச் சிறிய ஒரு கடமையை நிறைவேற்றாதும் கஞ்சத்தனம் காட்டுகின்றான்.