عن أَبِي أُمَامَةَ إِياسِ بنِ ثَعْلَبَةَ الحَارِثِيِّ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ، فَقَدْ أَوْجَبَ اللهُ لَهُ النَّارَ، وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ» فَقَالَ لَهُ رَجُلٌ: وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «وَإِنْ قَضِيبًا مِنْ أَرَاكٍ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 137]
المزيــد ...
அபூஉமாமா இயாஸ் இப்னு ஸஃலபா அல்ஹாரிஸீ (ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்கள் கூரினார்கள் :
யார் (பொய்ச்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையை அபகரித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கட்டாயமாக்கி விட்டான்; சொர்க்கத்தை அவருக்குத் தடை செய்துவிட்டான்' என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், 'அது ஒரு சிறிய பொருளாய் இருந்தாலுமா, அல்லாஹ்வின் தூதரே?' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்; அவர்கள், 'மிஸ்வாக் மரத்தின் ஒரு குச்சியாக அது இருந்தாலும் சரியே!' என்று பதிலளித்தார்கள்.
[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 137]
நபி முஹம்மது ﷺ அவர்கள், ஒரு முஸ்லிமின் உரிமையை பறிப்பதற்காக தனக்கு சொந்தமில்லை என்பதை தெளிவாக அறிந்த நிலையில்; அல்லாஹ்வின் பெயரில் பொய்யாக சத்தியம் செய்வதை கடுமையாக எச்சரித்தார்கள். அத்தகைய செயலுக்கான தண்டனை நரகமாகும். சுவர்க்கம் மறுக்கப்படும்; இது பெரும் பாவங்களில் ஒன்றாகும். ஒரு மனிதர்: 'அல்லாஹ்வின் தூதரே சத்தியம் செய்து பறிக்கப்படும் பொருள் மிகவும் சிறியதாக இருந்தாலுமா ? என் கேட்டார். அதற்கு நபி ﷺ அவர்கள்: 'அது அராக் மரத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு சிறிய மிஸ்வாக் குச்சியாக இருந்தாலும் கூட' என்று பதில் கூறினார்கள்.