عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «أقْرَبُ ما يَكون العبد مِنْ رَبِّهِ وهو ساجد، فَأَكْثروا الدُّعاء».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் : "ஓர் அடியான் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது ஸுஜூதில் இருக்கும் போதாகும். எனவே அதில் அதிகமாக பிராத்தியுங்கள் (துஆ செய்யுங்கள்)".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் : "ஓர் அடியான் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது ஸுஜூதில் இருக்கும் போதாகும். எனவே அதில் அதிகமாக துஆ செய்யுங்கள்". ஏனெனில் ஸுஜூதின் போது ஓர் அடியான் தனது உறுப்புக்களில் மிக உயர்ந்ததை பாதங்களால் மிதிக்கப்படும் நிலத்தில் வைக்கின்றான், அதேபோன்று தனது உடலில் மிக உயர்ந்த உறுப்பை மிகத் தாழ்ந்த உறுப்புடன் நேராக வைக்கின்றான். அதாவது அவனின் முகம்தான் உடலின் மிக உயர்ந்த உறுப்பு, இரு கால்களும் மிகத் தாழ்ந்த உறுப்பு, இரண்டையும் அல்லாஹ்வுக்கு பணிந்து, கட்டுப்படும் நோக்கில் நிலத்தில் ஓரே தரத்தில் வைக்கின்றான். இதனால்தான் அவன் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது ஸுஜூதில் இருக்கும் போது எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் பிரார்த்தனையை அதிகப்படுத்துமாறு நபியவர்கள் பணித்துள்ளார்கள். அல்லாஹ்வுக்கு பணியும் விதத்தில் தோற்றம், வார்த்தை இரண்டிலுமே நெருக்கம் ஒருங்கிணைகின்றது. இதனால்தான் அல்லாஹ்தான் தனது உள்ளமை, பண்புகள் அனைத்திலும் மிக உயர்ந்தவன், அவனுடன் ஒப்பிடும் போது மனிதன் மிகத் தாழ்ந்தவன் என்பதை சுட்டிக் காட்டும் வகையில் ஸுஜூதின் போது "ஸுப்ஹான ரப்பியல் அஃலா" (உயர்வான எனது இரட்சகனைத் துதிக்கின்றேன்) எனக் கூறுகின்றான்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ஸுஜூதில் அதிகமாகப் பிரார்த்திப்பது விரும்பத்தக்கது, ஏனெனில் அது பிரார்த்தனை ஏற்கப்படும் சந்தர்ப்பங்களில் ஒன்றாகும்.
  2. கட்டுப்படுதல் அல்லாஹ்வுடனான நெருக்கத்தை மென்மேலும் அதிகரிக்கின்றது.
  3. கட்டுப்படுதலை ஓர் அடியான் அதிகரிக்கும் போதெல்லாம் அவனது பிரார்த்தனைக்கு அல்லாஹ் பதிலளிக்கின்றான்.
  4. நன்மையான விடயங்கள், அதன் காரணிகள், வாயில்களைத் தனது சமூகத்திற்குப் போதிப்பதில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய ஆர்வம் தெளிவாகின்றது.
மேலதிக விபரங்களுக்கு