عن ابن عباس رضي الله عنهما : أن رسول الله صلى الله عليه وسلم لما بعث معاذا إلى اليمن قال له: "إنك تأتي قوما من أهل الكتاب، فليكن أولَ ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله" -وفي رواية: "إلى أن يوحدوا الله-، فإن هم أطاعوك لذلك فأعلمهم أن الله افترض عليهم خمس صلوات في كل يوم وليلة، فإن هم أطاعوك لذلك فأعلمهم أن الله افترض عليهم صدقة تؤخذ من أغنيائهم فَتُرَدُّ على فقرائهم، فإن هم أطاعوك لذلك فإياك وكَرَائِمَ أموالِهم، واتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب".
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார் : நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு ஆளுநராக அனுப்பிய போது பின்வருமாறு கூறினார்கள் : "c2">“நீர் வேதக்காரர் உள்ள சமூகத்திடம் செல்கின்றீர். நீர் முதலில் அழைப்பது 'உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' எனும் சாட்சியமாக இருக்கட்டும், - மற்றுமோர் அறிவிப்பில் 'அவர்கள் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதன் பால் அழைப்பதாக இருக்கட்டும்' என இடம்பெற்றுள்ளது- , அதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் அல்லாஹ் அவர்களுக்கு தினமும் ஐவேளைத் தொழுகைகளை அவர்களுக்கு விதியாக்கியுள்ளான் என்பதை அறிவியுங்கள். அதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வந்தர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற்காக செல்வத்தில் அல்லாஹ் ஸகாதை கடமையாக்கியுள்ளான் என்பதை அறிவியுங்கள். அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால் அவர்களின் பொருட்களில் சிறந்த வற்றை வசூலிப்பது குறித்து உம்மை எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை.” என்றார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு அழைப்பாளராகவும், போதகராகவும் அனுப்பிய போது தனது அழைப்புப் பணியில் செல்ல வேண்டிய திட்டத்தை வரைந்து கொடுத்தார்கள். அவர்கள் செல்லும் சமூகத்துடன் விவாதிக்கவும், சந்தேகங்களைத் தெளிவுபடுத்தவும் முன்னதாகவே தயாராவதற்காக வேத அறிவும், தர்க்கமும் உள்ள யூத, கிறிஸ்தவர்களிடம்தான் செல்கின்றீர் எனத் தெளிவாகக் கூறினார்கள். பின்னர் மிக முக்கியமானவற்றிலிருந்து ஆரம்பித்து, படிப்படியாகச் செல்லுமாறு பணித்தார்கள். எனவே முதலில் நம்பிக்கைச் சீர்திருத்தத்தின்பால் அழைக்க வேண்டும், அதுவே பிரதானமானதாகும். அதற்குக் கட்டுப்பட்டால் தொழுகையை நிலைநாட்டப் பணிக்க வேண்டும், ஓரிறைக் கொள்கைக்கு அடுத்து மகத்தான வணக்கம் அதுவே. அதற்கும் கட்டுப்பட்டால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதுடன், உதவிக்கரம் நீட்டும் வகையில் அவர்களிலுள்ள செல்வந்தர்கள் தமது பொருட்களிலிருந்து ஏழைகளுக்கு ஸகாத் வரி வழங்க வேண்டுமெனப் பணித்தார்கள். பொருட்களில் சிறந்த வற்றை வசூலிப்பதை எச்சரித்தார்கள். ஏனெனில் நடுத்தரமான பொருளே ஸகாத்தில் வழங்கப் போதுமானதாகும். பின் நீதம் செலுத்துவதையும், அநீதியிழைக்காமல் இருப்பதையும் ஊக்குவித்தார்கள்.அதன் விளைவாக அநீதியிழைக்கப்பட்டவர் பிரார்த்திக்காமலிருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு பணித்தார்கள். ஏனெனில் அவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படக் கூடியதாகும்.