عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«اثْنَتَانِ فِي النَّاسِ هُمَا بِهِمْ كُفْرٌ: الطَّعْنُ فِي النَّسَبِ، وَالنِّيَاحَةُ عَلَى الْمَيِّتِ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 67]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
மக்களிடம் இரு பண்புகள் உள்ளன. அவை அவர்களிடம் இறைநிராகரிப்பை ஏற்படுத்திவிடும் : வம்சத்தில் குறைகூறுவது, மரணித்த ஒருவருக்காக ஒப்பாரி வைத்து அழுவது.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 67]
இங்கு நபியவர்கள், ஜாஹிலிய்யாக் கால பண்புகளாகவும், நிராகரிப்பாளர்களின் செயற்களாகவும் உள்ள, மக்களிடம் காணப்படும் இரு பண்புகளைப் பற்றிக் கூறுகின்றார்கள். அவ்விரண்டுமாவன:
முதலாவது, மக்களது வம்சத்தில் குறைகூறி, அவற்றைக் தரம்குறைத்துப் பேசி, அவர்களைத் தாழ்த்திப் பெருமையடித்தல்.
இரண்டாவது, சோதனைகளின் போது, இறைவிதியில் வெறுப்பைக் காட்டும் விதமாக சப்தத்தை உயர்த்துதல், அல்லது பொறுமையிழப்பின் உச்சகட்டமாக, சட்டைகளைக் கிழித்துக்கொள்ளல்.