عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا مِنْ قَوْمٍ يَقُومُونَ مِنْ مَجْلِسٍ لَا يَذْكُرُونَ اللَّهَ فِيهِ إِلَّا قَامُوا عَنْ مِثْلِ جِيفَةِ حِمَارٍ، وَكَانَ لَهُمْ حَسْرَةً».
[صحيح] - [رواه أبو داود] - [سنن أبي داود: 4855]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
((ஒரு கூட்டத்தினர் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை (திக்ர்) நினைவுகூறாமல் எழுந்து செல்வது செத்த கழுதையை விட்டும் எழுந்து செல்வது போலாகும் . அது அவர்களுக்குக்கு (மறுமையில்) பேரிழப்பாக அமையும்))
[صحيح] - [رواه أبو داود] - [سنن أبي داود - 4855]
ஒரு கூட்டத்தினர் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவுகூறாமல் எழுந்து செல்வது துர்நாற்றமானதும், அழுக்கானதுமான ஒரு கழுதையின் பிணத்திற்கு முன் ஒன்றுகூடி விட்டு எழுந்துசெல்வதைப் போலாகும் என்று கூறுகின்றார்கள் நபி (ஸல்) அவர்கள். அங்கு இறைநினைவைப் பற்றிய பேச்சுக்களில் ஈடுபடாமல் இருந்தமையே அதற்கான காரணமாகும். மறுமையில் இந்த சபை அவர்களுக்குக் கைசேதமாகவும், நன்மைகளைக் குறைப்பதாகவும், நிரந்தரக் கவலையாகவும் இருக்கும்.