عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لاَ يَذْكُرُ رَبَّهُ، مَثَلُ الحَيِّ وَالمَيِّتِ»، ولفظ مسلم: «مَثَلُ الْبَيْتِ الَّذِي يُذْكَرُ اللهُ فِيهِ، وَالْبَيْتِ الَّذِي لَا يُذْكَرُ اللهُ فِيهِ، مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6407]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
'தனது ரப்பை நினைவுகூறுபவனுக்கும், தனது ரப்பை நினைவுகூறாதவனுக்கும் உதாரணம், உயிருள்ளவனும் உயிரற்றவனும் ஆகும். முஸ்லிம் அவர்களது அறிவிப்பில், 'அல்லாஹ்வை நினைவு கூறப்படும் வீட்டிற்கும், நினைவு கூறப்படாத வீட்டிற்கும் உதாரணம் உயிருள்ளவனும் உயிரற்றவனும் ஆகும்.' என்று உள்ளது.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 6407]
நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வை நினைவுகூர்பவனுக்கும், நினைவுகூறாதவனுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்தும் போது, உயிருள்ளவனுக்கும் உயிரற்றவனுக்கும் இடையில், பயனிலும், அழகிய வெளித் தோற்றத்திலும் உள்ள வேறுபாட்டைப் போல என்று அடையாளப்படுத்துகின்றார்கள். தனது ரப்பை நினைவுகூர்பவன் வெளித்தோற்றம் வாழ்க்கை எனும் ஒளியாலும், உள்ளம் அறிவு ஞானம் எனும் ஒளியாலும் அலங்கரிக்கப்பட்டவனைப் போல. அவனில் பலன்கள் உள்ளது. அல்லாஹ்வை நினைவுகூறாதவன், வெளியில் செயலற்றவனாகவும், உள்ளத்தில் ஒன்றுமில்லாதவனாகவும் இருக்கும் மரணித்த பிணத்தைப் போல. அவனில் எப்பயனும் இல்லை.
வீடுகளும் இவ்வாறுத்தான். அங்கு வசிப்பவர்கள் அல்லாஹ்வை நினைவுகூர்பவர்களாக இருந்தால், உயிருள்ள வீடு எனப்படும். அவ்வாறில்லா விட்டால், அங்கிருப்பவர்கள் அல்லாஹ்வை நினைவுகூறாத காரணத்தினால், இறந்த வீடு எனப்படும். வீடு, உயிருள்ளது, உயிரற்றது எனக் கூறப்பட்டுள்ளதன் மூலம் நாடப்படுவது அதில் வசிப்பவர்களே!.