عَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَلاَ أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ، وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ، وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ وَخَيْرٌ لَكُمْ مِنْ إِنْفَاقِ الذَّهَبِ وَالوَرِقِ، وَخَيْرٌ لَكُمْ مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ؟» قَالُوا: بَلَى. قَالَ: «ذِكْرُ اللهِ تَعَالَى».
[صحيح] - [رواه الترمذي وابن ماجه وأحمد] - [سنن الترمذي: 3377]
المزيــد ...
அபூதர்தா ரழியல்லாஹு அன்ஹூ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக கூறினார்கள் :
நான் உங்களுக்கு ஒர் அமலை காண்பித்துதரவா ? அது உங்களின் எல்லா அமல்களைவிடவும் சிறந்தது. உங்கள் அதிபதியிடம் அது மிகவும் தூய்மையானது. உங்கள் அந்தஸ்த்தை மிகவும் அதிகப்படுத்தக்கூடியது. தங்கம் வெள்ளியை செலவளிப்பதை விடவும் உங்களுக்குச் சிறந்தது. மட்டுமல்ல, நீங்கள் உங்கள் எதிரிகளுடன் போரிட்டு நீங்கள் அவர்களின் கழுத்தையும் அவர்கள் உங்கள் கழுத்தையும் வெட்டுவதை விடவும் சிறந்தது ஆகும். அதற்கு நபித்தோழர்கள் "ஆம்" அதனை எமக்கு காண்பித்துத் தாருங்கள் என்றார்கள். நபியவர்கள் கூறினார்கள் அதுதான் அல்லாஹ்வை- திக்ர் செய்வது –நினைவுகூர்வது என்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [رواه الترمذي وابن ماجه وأحمد] - [سنن الترمذي - 3377]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களிடம் பின்வருமாறு கேட்டார்கள் :
அதிபதியான அல்லாஹ்விடத்தில் அமல்களில் மிகவும் சிறந்ததும் உன்னதமானதும், மிகவும் அபிவிருத்திமிக்கதும், தூய்மை நிறைந்துமான ஒன்றை உங்களுக்கு சொல்லித்தருவதை நீங்கள் விரும்புகிறீர்களா?
சுவர்க்கத்தில் உங்களின் அந்தஸ்த்தை மிகவும் உயர்த்தக் கூடியதும்,
தங்கம் வெள்ளியை தர்மம் செய்வததை விட மிகவும் நன்மையை பெற்றுத்தரக் கூடியதும்?
போரில் காபிர்களை நேருக்குநேர் எதிர் கொண்டு, நீங்கள் அவர்களின் கழுத்தையும் அவர்கள் உங்களின் கழுத்தையும் வெட்டிவீழ்த்துவதை விடவும் மிகவும் சிறந்ததும் ஆகும்,
அதற்கு நபித்தோழர்கள் நாம் அதனை விரும்புகிறோம் என்றார்கள்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எல்லா நேரங்களிலும் அனைத்து நிலைகள் மற்றும் நிலமைகளிலும் அல்லாஹ்வை நினைவுகூர்வதாகும் என்றார்கள்.