عَنْ أَبِي طَلْحَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لاَ تَدْخُلُ المَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 3322]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக -அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் :
நாய் மற்றும் உருவமிருக்கும் வீட்டில் மலக்குமார்கள் பிரவேசிக்க மாட்டார்கள்.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري - 3322]
நாயோ உயிர் உள்ள உருவப்படமோ உள்ள வீட்டில் அருள் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அவர்கள குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் உயிருள்ள உருவப்படங்களை உருவாக்குவது (சித்தரிப்பது) மிகப்பெரும் ஒரு தீமையாகும். காரணம் அவை அல்லாஹ்வின் படைப்பை ஒத்திருப்பதோடு இணைவைப்பிற்கு வழிவகுக்கும் ஒரு சாதனமாக இருக்கிறது அத்துடன் அவ்வுருவப்படங்களில் சிலவை அல்லாஹ்வைத் தவிர்த்து வணங்கப்படுபவைகளாகும். நாய் இருக்கும் வீட்டிட்குள் மலக்குகள் நுழையாது இருப்பதற்கு அவை அதிகம் அசுத்தமானவற்றை சாப்பிடுவதும். அதே வேளை சில நாய்கள் ஷைத்தான்கள் என அழைக்கப்டுவதும் காரணமாக அமைந்துள்ளது. அந்தவகையில் ஷைத்தான்கள் மலக்குகளுக்கு எதிரானோர் ஆவார்கள். மேலும் மலக்குகள் நாயிருக்கும் வீட்டிட்குள் நுழையாது இருப்பதற்கு அதன் துர்நாற்றமும் ஒரு காரணமாகும். ஏனெனில் துர்நாற்றத்தை மலக்குகள் விரும்புவதில்லை. இன்னொரு காரணம் நாயை செல்லப்பிராணியாக எடுத்துக் கொள்வது தடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அருள் மலக்குகள் அவரின் வீட்டிட்குள் நுழையாது இருப்பதன் மூலமும் அதில் தொழாது, அவருக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்காது, அவருக்கும் அவரது வீட்டிட்கும் அருள்வளம் கிடைப்பதற்கு பிரார்த்திக்காதிருப்பதன் மூலமூம் அவரை ஷைத்தானின் தீங்கு ஏற்படுவதை விட்டும் தடுக்காதிருப்பதன் மூலமும் அதனை செல்லப் பிராணியாக எடுத்துக்கொண்டவர் தண்டிக்கப் படுகிறார்.