عَن أُمِّ سَلَمَةَ أُمِّ المُؤْمِنينَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رضي الله عنها قَالت: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ كَانَ لَهُ ذِبْحٌ يَذْبَحُهُ فَإِذَا أُهِلَّ هِلَالُ ذِي الْحِجَّةِ، فَلَا يَأْخُذَنَّ مِنْ شَعْرِهِ، وَلَا مِنْ أَظْفَارِهِ شَيْئًا حَتَّى يُضَحِّيَ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 1977]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனைவியான உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அல்லாஹ்வின் தூதர் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க நாடினால் துல்ஹஜ் பிறை பிறந்ததிலிருந்து அவர் தனது உடல் ரோமங்களைக் களைய வேண்டாம். மற்றும் நகங்களை வெட்ட வேண்டாம் என்று நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 1977]

விளக்கம்

நபி (ஸல்) அவர்கள், யார் உழ்ஹிய்யா (குர்பானி) கொடுக்க விரும்புகிறார்களோ, அவர்கள் துல் ஹிஜ்ஜா மாதத்தின் பிறை தோன்றிய பிறகு, தங்கள் உழ்ஹியாவை நிறைவேற்றும் வரை தலையின் முடி, கைகுழி முடி, மீசை அல்லது பிற உடல் முடி எதையும், மற்றும் கைகள் அல்லது கால்களின் நகங்களிலிருந்தும் எதையும் எடுக்கக்கூடாது என்று கட்டளையிட்டார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. யார் துல் ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்கள் (அஷ்ரு துல்ஹிஜ்ஜா) தொடங்கிய பிறகு குர்பானி கொடுக்க நிய்யத் வைக்கிறாரோ, அவர் அந்த நிய்யத் வைத்த தருணத்திலிருந்து அதனை அறுக்கும் வரை மேற்கூறப்பட்ட விடயங்களை (முடி மற்றும் நகம் வெட்டாமையை) கடைப்பிடிக்க வேண்டும்.
  2. முதல் நாளில் குர்பானியை அறுக்கவில்லை என்றால், தஷ்ரீகுடைய நாட்களில் எந்த நாளில் குர்பானி செய்கிறாரோ அந்த நாள் வரை அவர் முடி, நகம் வெட்டுவதை தவிர்த்து இருக்க வேண்டும்.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (44)