عن عبد الله بن عمر رضي الله عنهما مرفوعاً: «الْحَيَاء مِنْ الْإِيمَانِ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறுகின்றார்கள் : "வெட்கம் ஈமானைச் சார்ந்தது".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
வெட்கம் ஈமானைச் சார்ந்தது என்று சொல்லக் காரணம் வெட்கமுடையவன் வெட்கத்தின் காரணமாக பாவ காரியங்களை விட்டும் தவிர்ந்து தன் கடமைகளில் ஈடுபடுவான் என்பதே.இது அல்லாஹ்வின் மீதுள்ள ஈமானின் விளைவே.அடியானின் மனதில் ஈமான் நிரம்புகின்ற போது அது அவனை பாவ காரியங்களை விட்டும் தடுத்துவிடும். மேலும் கடமையில் ஈடுபடும்படி அது அவனைத் தூண்டும்.எனவே அது அடியான் மீது செலுத்தி வரும் இந்த பயன் தரும் தாக்கத்தின் அடிப்படையில் வெட்கம் ஈமானின் தரத்தைப் பெற்றுவிட்டது.