عن أبي هُريرة رضي الله عنه مرفوعًا: «إذا قلتَ لصاحبك: أَنْصِتْ يوم الجمعة والإمام يَخْطُبُ، فقد لَغَوْتَ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ "மௌனமாக இரு" என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

ஜும்ஆ நிகழ்வின் மிகப்பெரிய அடையாளங்களுள் இரு பிரசங்கங்களும் உள்ளன. மக்களை உபதேசித்து, நல்வழிப் படுத்துவதே இதன் நோக்கமாகும். உபதேசத்திலிருந்து படிப்பினை பெறுவதற்காக உரையாற்றுபவரின் செய்தியைக் காதுதாழ்த்திக் கேட்பது சமூகந்தருவோரின் அவசியமான ஒழுங்குமுறைகளில் ஒன்றாகும். இதனால்தான் தனது பக்கத்திலிருப்பவரைப் பேசாமல் தடுக்கும் "மௌனமாக இரு" போன்ற குறைந்த வார்த்தைகளாயினும் பேசுவதை நபியவர்கள் எச்சரித்தார்கள். இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது பேசினால் அவர் வீண் பேச்சுப் பேசியவராகக் கணிக்கப்பட்டு, ஜும்ஆவின் முழுமையான பயன் கிடைக்காதவராகி விடுவார். ஏனெனில் இவர் தனது, மற்றும் பிறருடைய கவனம் சிதறும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. வெள்ளிக்கிழமை இமாம் உரையாற்றும் போது மௌனித்து செவிதாழ்த்துவது அவசியமாகும் என்பதில் அனைத்து அறிஞர்களும் ஏகோபித்துள்ளனர்.
  2. உரையைக் கேட்கும் போது பேசுவது ஹராமாகும், அது அவ்விடத்திற்குப் பொருத்தமற்றதாகும். அது தீமையைத் தடுத்தல், ஸலாத்திற்கு பதிலுரைத்தல், தும்மியவருக்குப் பதில் கூறல், ஏனையோருடன் உரையாடும் எந்த வகையான பேச்சாக இருந்தாலும் சரியே.
  3. இமாமுடன் பேசுவதும், இமாம் யாருடனாவது பேசுவதும் இதிலிருந்து விதிவிலக்களிக்கப்படுகின்றது.
  4. தொலைவில் இருப்பதனால் உரை கேட்காதவருக்கும் சில அறிஞர்கள் விதிவிலக்கு அளித்துள்ளனர். ஏனெனில் அவர் மௌனிக்க வேண்டியதில்லை, மாறாக குர்ஆன் ஓதுதுல், திக்ரு செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம். செவிடு காரணமாக உரை கேட்காதவர் சப்தமிட்டுக் குர்ஆன் ஓதுவதன் மூலம் தனக்கு அருகிலுள்ளோரின் கவனம் சிதற வைக்கலாகாது, மாறாக தனக்கு மாத்திரம் கேட்குமளவு இரகசியமாக ஓதிக் கொள்ள வேண்டும்.
  5. அவ்வாறு பேசுவதற்குரிய தண்டனை ஜும்ஆவின் நற்பாக்கியங்களை இழத்தலாகும்.
  6. இரு உரைகளுக்கும் மத்தியில் பேசலாம்.
  7. இமாம் உரையாற்றும் போது நபியவர்களின் பெயர் உச்சரிக்கப்பட்டால் இரகசியமாக அன்னார் மீது ஸலவாத்தும், ஸலாமும் கூற வேண்டும். அதன் மூலம் அனைத்து நபிமொழிகளையும் அமுல்படுத்தியதாகி விடும். அதே போன்றுதான் பிரார்த்தனைக்கு ஆமீன் கூறுவதுமாகும்.