عن أبي هُريرة رضي الله عنه مرفوعًا: «إذا قلتَ لصاحبك: أَنْصِتْ يوم الجمعة والإمام يَخْطُبُ، فقد لَغَوْتَ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ "மௌனமாக இரு" என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
ஜும்ஆ நிகழ்வின் மிகப்பெரிய அடையாளங்களுள் இரு பிரசங்கங்களும் உள்ளன. மக்களை உபதேசித்து, நல்வழிப் படுத்துவதே இதன் நோக்கமாகும். உபதேசத்திலிருந்து படிப்பினை பெறுவதற்காக உரையாற்றுபவரின் செய்தியைக் காதுதாழ்த்திக் கேட்பது சமூகந்தருவோரின் அவசியமான ஒழுங்குமுறைகளில் ஒன்றாகும். இதனால்தான் தனது பக்கத்திலிருப்பவரைப் பேசாமல் தடுக்கும் "மௌனமாக இரு" போன்ற குறைந்த வார்த்தைகளாயினும் பேசுவதை நபியவர்கள் எச்சரித்தார்கள். இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது பேசினால் அவர் வீண் பேச்சுப் பேசியவராகக் கணிக்கப்பட்டு, ஜும்ஆவின் முழுமையான பயன் கிடைக்காதவராகி விடுவார். ஏனெனில் இவர் தனது, மற்றும் பிறருடைய கவனம் சிதறும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.