عَنْ أَبِي هُرَيْرَةَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ صَخْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْت رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم يَقُولُ:
«مَا نَهَيْتُكُمْ عَنْهُ فَاجْتَنِبُوهُ، وَمَا أَمَرْتُكُمْ بِهِ فَافْعَلُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ، فَإِنَّمَا أَهْلَكَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ كَثْرَةُ مَسَائِلِهِمْ، وَاخْتِلَافُهُمْ عَلَى أَنْبِيَائِهِمْ».
[صحيح] - [رواه البخاري ومسلم] - [الأربعون النووية: 9]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
"நான் உங்களுக்கு எதைத் தடை செய்திருக்கின்றேனோ அதனை முழுமையாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு எதை ஏவியுள்ளேனோ அதனை முடியுமானளவு செய்யுங்கள். அளவுக்கு அதிகமான கேள்விகளைக் கேட்டதும், தங்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்களோடு ஒத்துப் போகாததுமே உங்களுக்கு முன்னால் இருந்தவர்களை அழிவுக்கு ஆக்கபடுத்தியது.
-
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், எமக்கு ஏதாவது ஒன்றைத் தடை செய்தால், அதை விதிவிலக்கின்றி முழுமையாக தவிர்ந்து நடப்பது எம்மீது கடமை என்றும், அவர்கள் ஏதாவது செய்யுமாறு கட்டளையிட்டால், எம்மால் முடிந்தவரை அதைச் செய்ய வேண்டும் என்றும் இங்கு எங்களுக்கு தெளிவுபடுத்துகிறார்கள். அதனைத்தொடர்ந்து, நபியவர்கள் முன்பு வாழ்ந்த சில சமூகங்கள் தங்கள் தூதுவர்களிடம்; பயனற்ற கேள்விகளை அதிகம் கேட்டு, அவர்களுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தார்கள். அவர்களைப் போல இருக்க வேண்டாம் என்று எம்மை எச்சரிக்கிறார்கள். இவ்வாறான நடத்தையுடையவர்களை அல்லாஹ் பல்வேறு வகையான பேரழிவுகள் மூலம்; தண்டித்தான். எனவே நாமும் அவர்கள் போலல்லாது இருப்பது அவசியம். அவர்கள் போன்று நாம் இருந்தால் அவர்களின் நிலையே எமக்கும் ஏற்படும்.