عَن أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيُمْسِكْ بِيَدِهِ عَلَى فِيهِ، فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2995]
المزيــد ...
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்:
உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான்.
[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 2995]
சோம்பல் மற்றும் வயிறு நிறைந்திருத்தல் போன்ற காரணங்களினால் வாயைத் திறப்பதன் மூலம் ஒருவர் கொட்டாவி விட்டால் தனது கையை வாயில் வைத்து மூடிக்கொள்ளட்டும் என்று இந்த ஹதீஸில் வழிகாட்டுகிறார்கள். ஏனெனில் அவ்வாறு திறந்த நிலையில் ஒருவர் கொட்டாவிவிட்டால் ஷைத்தான் அவரின் வாயினுள்ளே சென்று விடுகிறான். வாயில் கையை வைத்து மூடுவது ஷைத்தானுக்கு தடுப்பாக அமைந்துவிடுகிறது.