عن عمران بن حصين رضي الله عنهما قال: كانت بي بَوَاسيرُ، فسألت النبي صلى الله عليه وسلم عن الصلاة، فقال: «صَلِّ قائما، فإن لم تستطع فقاعدا، فإن لم تستطع فعلى جَنْبٍ».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) கூறுகின்றார் : நான் மூல நோயினால் பீடிக்கப்பட்டிருந்தேன். தொழுகை பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது நபியவர்கள்: "நின்ற நிலையில் தொழுவீராக, அதற்கு முடியாவிட்டால் உட்கார்ந்த நிலையில், அதற்கும் முடியாவிட்டால் சாய்ந்த நிலையில் தொழுவாயாக" என்று கூறினார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்
மூல நோய், அல்லது நிற்கும் போது சிரமம் உள்ளவர்கள் தொழும் முறையை இந்நபிமொழி தெளிவுபடுத்துகின்றது. சக்தி இல்லாவிட்டாலே தவிர நின்று தொழுவதுதான் அடிப்படை என்பதை நபியவர்கள் அறிவிக்கின்றார்கள். அவ்வாறு முடியாவிட்டால் உட்கார்ந்து தொழ வேண்டும், அதுவும் முடியாவிட்டால் சாய்ந்து தொழ முடியும்.