عَنْ عَلِيٍّ رضي الله عنه قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«قُلِ اللهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي، وَاذْكُرْ بِالْهُدَى هِدَايَتَكَ الطَّرِيقَ، وَالسَّدَادِ سَدَادَ السَّهْمِ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2725]
المزيــد ...
அலீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இவ்வாறு கூறினார்கள் :
'அல்லாஹும்மஹ்தினீ, வ ஸத்தித்னீ' (இறைவா! எனக்கு நல்வழி காட்டுவாயாக! நேர்மையானதைச் சரியாகச் செய்ய எனக்கு வாய்ப்பளிப்பாயாக!) என்று பிரார்த்திப்பீராக. அப்போது (வழி தவறியவனுக்குச் சரியான) வழியை நீர் காட்டுவதையும், (வளைந்த) அம்பை நிமிர்த்தி நேராக்குவதையும் நினைத்துக் கொள்வீராக' என்று கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2725]
நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், அல்லாஹ்விடம் பின்வருமாறு பிரார்த்தித்துக் கேட்குமாறு கூறுகின்றார்கள் : யா அல்லாஹ்! எனக்கு நல்வழி காட்டுவாயாக! என்னை நேர்வழிப்படுத்துவாயாக! மேலும், நேர்மையானதைச் செய்ய எனக்கு வாய்ப்பளிப்பாயாக! அதில் எனக்கு அருள் புரிவாயாக! எனது எல்லா விவகாரங்களிலும் சரியானவனாக என்னை ஆக்கிவிடுவாயாக!
ஹுதா என்பது, சத்தியத்தைப் பொதுவாகவும், விளக்கமாகவும் அறிந்துகொள்வதோடு, உள்ளத்தாலும், உறுப்புக்களாலும் அதனை நடைமுறைப்படுத்த அருள்புரியப்படுவதுமாகும்.
ஸதாத் என்பது, சத்தியத்தின் மீது சரியாக இருக்கும் விதத்தில், உறுதியாக இருப்பதற்கு அருள் புரியப்படுவதாகும். அதாவது, சொல், செயல், நம்பிக்கை என அனைத்திலும் நிலையான பாதையில் இருப்பதாகும்.
அர்த்தம் சார்ந்த அம்சங்கள், புலன் சார்ந்த அம்சங்கள் ஊடாகவே தெளிவாகப் புரியப்படுவதால், இந்த துஆவை நீங்கள் ஓதும் போது, (வழி தவறியவனுக்குச் சரியான) வழியை நீர் காட்டுவதையும், (வளைந்த) அம்பை நிமிர்த்தி நேராக்குவதையும் நினைத்துக் கொள்வீராக. நேர்வழிகாட்டலை நீ கேட்கும் போது, பயணத்தில் இருப்பவனுக்கு வழிகாட்டுவதை நினைவில் கொள்வாயாக! ஏனெனில், அவன் வழிதவறிப் போய்விடக் கூடாது என்ற பயத்தில், வலப்பக்கமோ, இடப்பக்கமோ திரும்பாமல் நேராகவே செல்வான். அப்போது தான், ஈடேற்றமாக, தனது இலக்கைத் துரிதமாக அடைந்துகொள்ளலாம்.
நேர்த்தி என்பதன் மூலம், அம்பை நிமிர்த்தி நேராக்குவதையும் நினைத்துக் கொள்வீராக. அம்பை நேராக நிமிர்த்தி வைக்கும் போது, அது வேகமாகச் சென்று, இலக்கை அடைவதை நீ காண்பாய். எறிபவன் ஒரு இலக்கை நாடினால், அந்த இலக்கை நோக்கி, அம்பை நேராக எறிவான். அவ்வாறு தான் அல்லாஹ்விடம் அந்த நேர்த்தியை ஓர் அம்பின் வடிவில் எண்ணிக் கேளுங்கள். எனவே, நீங்கள் உங்களது பிரார்த்தனை, நேர்வழி எனும் இலக்கையும், நேர்த்தியின் தீர்ச்சையையும் அடைவதைக் கேட்பதாக அமையும்.
நீங்கள் அல்லாஹ்விடம் நேர்த்தியைக் கேட்கும் போது, இந்த அர்த்தத்தை உள்ளத்தால் எண்ணிக் கொள்ளுங்கள். அப்போது, நீங்கள் கேட்பது, எறிவதற்காக நீங்கள் பயன்படுத்தும் ஈட்டியைப் போல இருக்கும்.