عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ كَانَتْ لَهُ امْرَأَتَانِ فَمَالَ إِلَى إِحْدَاهُمَا، جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَشِقُّهُ مَائِلٌ».
[صحيح] - [رواه أبو داود والترمذي والنسائي وابن ماجه وأحمد] - [سنن أبي داود: 2133]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
யாருக்கு இரு மனைவியர் இருந்து, அவர்களில் ஒருவர் பக்கம் சாய்ந்து விடுகின்றாரோ, அவர் மறுமையில் உடலின் ஒரு பாதி வளைந்த நிலையில் வருவார்.
[சரியானது] - [இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜ, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்] - [ஸுனன் அபூ தாவூத் - 2133]
யாருக்காவது பல மனைவியர் இருந்து, செலவழித்தல், தங்குமிடம் மற்றும் ஆடை வழங்கல், இராத்தரித்தல் போன்ற இயலுமான அம்சங்களில் அவர்களிடையே நீதம் செலுத்தா விட்டால் அதற்குத் தண்டனையாக மறுமையில் அவரது உடலின் ஒரு பாதி வளைந்தவாராக வருவார் என நபியவர்கள் கூறுகின்றார்கள். மனைவியரோடு நடந்து கொள்வதில் ஒரு பக்கம் சாய்ந்து, அநீதமிழைத்தமைக்கான தண்டனையாக இவ்வாறு வளைந்து வருவார்.