عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: «إذا أَكَلَ أحدُكم فَلْيَأْكُلْ بِيَمِينِه، وإذا شَرِب فَلْيَشْرَبْ بِيَمِينِه فإنَّ الشيطان يأكلُ بِشِمَالِه، ويَشْرَب بِشِمَالِه».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கரத்தால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கரத்தால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கரத்தால்தான் உண்கிறான்; இடக்கரத்தால்தான் பருகுகிறான்".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
இந்நபிமொழியில் வலக்கரத்தால்தான் உண்ணவும், பருகவும் வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டுள்ளதுடன், இடக்கரத்தால் உண்ணவோ, பருகவோ கூடாதெனத் தடையும் வந்துள்ளது. அதற்குரிய காரணமும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது, அதுதான் ஷைத்தான் இடக்கரத்தால் உண்பதும், பருகுவதும் ஆகும். இங்கு ஏவல் கடமையைக் குறிக்கின்றது என்பதையே காட்டுகின்றது, இடக்கரத்தால் உண்பதும், பருகுவதும் ஹராமாகும். ஏனெனில் இது ஷைத்தானுடைய செயல், குணம் எனக் காரணும் கூறியுள்ளார்கள். ஷைத்தான் ஒரு புறமிருக்க பாவிகளின் வழிகளையே தவிர்க்குமாறு முஸ்லிம் ஏவப்பட்டுள்ளான். யார் பிற சமூகத்திற்கு ஒப்பாகின்றாரோ அவரும் அதே கூட்டத்தைச் சார்ந்தவராவார்.