عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ:
«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ، وَغَلَبَةِ الْعَدُوِّ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ».
[صحيح] - [رواه النسائي وأحمد] - [سنن النسائي: 5475]
المزيــد ...
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு துஆக் கேட்பார்கள் :
யா அல்லாஹ்! கடன் சுமையை விட்டும், எதிரியின் அடக்குமுறையை விட்டும் மேலும், எதிரிகளின் நகைப்பை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
[ஸஹீஹானது-சரியானது] - [رواه النسائي وأحمد] - [سنن النسائي - 5475]
நபியவர்கள் இங்கு சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள் :
யா அல்லாஹ்! கடன் சுமையை (அது என்னை மிகைப்பதையும், அதன் கவலை மற்றும் சோதனைகளையும்) விட்டும் நான் (வேறு யாரிடமும் இல்லாமல்) உன்னிடம் (ஒதுங்கிப்) பாதுகாப்புத் தேடுகின்றேன். அவற்றைத் திருப்பிச் செலுத்திவிட உதவுமாறு நான் உன்னிடம் கேட்கின்றேன்.
இரண்டாவது : 'எதிரியின் அடக்குமுறையை விட்டும்' (அதாவது, எதிரி என்னை அடக்கி, ஆதிக்கம் செலுத்துவதை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். அவனுடைய தொல்லைகளைத் தடுத்து, அவனை வெற்றிகொள்ள உதவுமாறு உன்னிடம் கேட்கின்றேன்.)
மூன்றாவது : 'எதிரிகளின் நகைப்பு' அதாவது, முஸ்லிம்களுக்கு ஏற்படும் சோதனைகள் மற்றும் துன்பங்களில் அவர்கள் மகிழ்ச்சியடைவது.