عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا يَسْتُرُ عَبْدٌ عَبْدًا فِي الدُّنْيَا إِلَّا سَتَرَهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2590]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
ஓர் அடியான் இன்னோர் அடியானின் குறையை மறைத்தால், அல்லாஹ் மறுமையில் அவரின் குறையை மறைப்பான்.
[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 2590]
ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிம் ஒருவரை ஏதாவதொரு விடயத்தில் குறையை மறைத்தால், அல்லாஹ் மறுமையில் அவரின் குறையை மறைப்பான். ஏனெனில், கூலியென்பது குறித்த செயலுக்க ஒப்பாகவே கிடைக்கும். அல்லாஹ் அவரை மறைப்பதென்பது, அவரது குறைகளையும், பாவங்களையும், மஹ்சரில் மக்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்தாமல் மறைப்பதாகும். சிலவேளை, அவற்றை அவரிடமே கூறாமலோ, விசாரிக்காமலோ கூட இருக்கலாம்.